ரெண்டு பொண்டாட்டியும் ஒரே நேரத்தில் பண்ண சொன்னாங்க…. வியர்த்து விறுவிறுத்துப்போன சரத்குமார்!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான சரத்குமார் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதியாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவராக அறியப்பட்ட இவர் பின்னாளில் சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சரத்குமார் வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் பெற்றார் . அதன் பின்னர் அவர் சினிமாவில் நடித்த போது நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால் மனைவி சாயாதேவி அவரை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் நடிகை ராதிகாவை முறைப்படி இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

தற்போது முன்னாள் மனைவியுடன் நட்பாக பழகி வருகிறார் சாத்குமார். இந்நிலையில் ஆரம்பத்தில் மகள் வரலட்சுமியை சரத்குமார் நடிக்கவே விடவில்லையாம். தன் மகள் நடிக்க செல்வதில் அவருக்கு விருப்பமே இல்லையாம். அவரின் விருப்பத்தை மீறி தான் வரலட்சுமி தற்போது நடித்து வருகிறார். இது குறித்து வரலக்ஷ்மி அம்மா சாயாவிடம் கேட்டாராம்.

அவரோ அப்பாவிடம் கேளு அவர் ஓகே சொன்னால் நடிக்க போ என சொல்லிவிட்டாராம். பின்னர் வரலக்ஷ்மி சரத்குமாரிடம் கேட்க எடுத்த எடுப்பிலேயே வேண்டாம் என கூற பின்னர் ராதிகாவும், சரத்குமாரின் முதல் மனைவி சாயாவும் சேர்ந்து சரத்குமார் நடித்துக்கொண்டிருந்த படப்பிடிப்பிற்கே சென்று மகளை நடிக்க வைத்தால் என்ன தப்பு? நாம் அனைவரும் சினிமா தொழிலில் இருப்பவர்கள் தான் எனவே பாதுகாப்பாக இருப்பார் பார்த்துக்கொள்ளலாம்.

தயவு செய்து வரலக்ஷ்மி சினிமாவில் நடிக்க சம்மதியுங்கள் என கேட்டார்களாம். இரண்டு மனைவிகளும் ஒன்று சேர்ந்து வந்ததால் படப்படப்பில் வியர்த்த சரத்குமார், சரி என்று ஒத்துக்கொண்டுள்ளார். இதையடுத்தே வரலட்சுமி போடா போடி படத்தில் நடிக்க கமிட் ஆகி நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படவாய்ப்புகள் கிடைத்து திறமையான நடிகையாக கோலிவுட்டில் கால் பதித்துவிட்டார்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.