வரலட்சுமிக்கு விரைவில் டும்டும்டும்?… மகளின் திருமணம் குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசிய சரத்குமார்..!

டோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். தற்போது ‘சபரி’ படத்திலும் இதற்கு முன்பு ஏற்றிடாத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் தவறுவதே இல்லை. அடிக்கடி போட்டோக்கள், வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார்.

சமீபகாலமாக தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் வரலட்சுமி. சமீபத்தில் கூட பாலகிருஷ்ணாவுடன் நடித்திருந்த வீரசிம்ஹா ரெட்டி படம் பொங்கலுக்கு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக நடிகை வரலட்சுமி நடிப்பில் கொன்றால் பாவம் என்கிற திரைப்படம் தயாராகி வருகிற மார்ச் 10-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் விழா சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வரலட்சுமியின் தந்தை சரத்குமாரிடம், அவரது மகளின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த சரத்குமார், “அது வரலட்சுமியுடைய தனி விருப்பம். தான் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன் என்றும், தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துவிட்டதாக வரலட்சுமி வந்து தன்னிடம் கூறும்போது அவருக்கு திருமணம் செய்துவைப்பேன்” என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நடிகர் விஷாலை சில ஆண்டுகள் காதலித்த வரலட்சுமி, பின்னர் அவரை பிரேக் அப் செய்து பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.