வரலட்சுமி பத்தி தப்பா பேசுவியா?.. மட்டமாக பேசிய நபருக்கு எச்சரிக்கை விடுத்த சரத்குமார்..!

கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது, நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

வரலட்சுமி சரத்குமார் சரத்குமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இவர் பிஸியாக தமிழ், தெலுங்கு, மொழி படங்கள் நடித்து வருகிறார். இவருக்கு மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ்வுக்கும் கடந்த மார்ச் மாதம் மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இவர்களது திருமணம் சமீபத்தில் நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், வரலட்சுமியின் கணவர் ஆபத்தானவர் போன்ற நெகடிவ் கருத்துக்கள் அவரின் உடல் தோற்றத்தை வைத்து பலரும் சமூக வலைதளத்தில் பேசி வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சரத்குமார் தற்போது, பேசியுள்ள அதாவது தனது மகள் திருமணத்தில் எழுந்த தவறான விமர்சனங்களுக்கு பதில் கொடுத்திருக்கிறார்.

அதில், அவர் பேசுகையில் நான் சமூக வலைதளங்களை கவனித்து வருகிறேன். அவர்களுடைய நேரம் போக வேண்டும் என்பதற்காக மற்றவர்களின் வாழ்க்கை விமர்சித்து வருகிறார்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் நேரில் வந்து பேச வேண்டும். இப்படி மறைந்திருந்து பேசுபவர்களுக்கு என்ன தைரியம் இருக்கப் போகிறது. நான் உங்களுக்காக மட்டும் பேசவில்லை. எல்லா பெண்களுக்காகவும் தான் பேசுகிறேன். உங்கள் மனதில் எழும் கற்பனையை வைத்துக்கொண்டு மற்றவர்களை கண்ணா பிண்ணா என்று பேசுவதற்கு உரிமை யார் கொடுத்தது.

நான் எப்போதும் நெகட்டிவ் கமெண்ட்களை பார்க்க மாட்டேன். ஆனால், சிலர் இந்த மாதிரி நெகட்டிவ் கருத்துக்களை பகிர்வது மனதளவில் கஷ்டமாக இருக்கிறது. என்னுடைய மகள் பணத்திற்காக திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு, நான் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. வரலட்சுமி எதற்காக திருமணம் செய்து கொண்டார் என்பது அவருடைய முடிவு. அவர் நிக்கோலாயை மனதார பிடித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், சில தவறான கமெண்ட்கள் செய்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

14 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

14 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

15 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

16 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

16 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

17 hours ago

This website uses cookies.