விஜய்யை சூப்பர்ஸ்டார் என அழைத்த சரத்குமார்.. மேடையிலேயே வெச்சு செய்த சத்யராஜ்..!

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. இந்நிலையில், சமீபகாலமாக இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தினால் பெரும் சர்ச்சையை கிளம்பி வருகிறது.

வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சொல்லவே, கொந்தளித்த ரஜினி ரசிகர்கள் சோசியல் மீடியாவையே ரணகளம் செய்தனர். இந்த பிரச்சனை தற்போது வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில், விழா ஒன்றில் சத்யராஜிடம் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்வி கேட்டதற்கு பதிலளித்த சத்யராஜ், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் மட்டும்தான். அது ரஜினி சார் தான் என போட்டு உடைத்திருக்கிறார்.

அதற்கு விளக்கமளித்த அவர், “சூப்பர் ஸ்டார் என்பது சம்பளத்திலும், வியாபாரத்திலும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவரை குறிக்கும். அந்த வகையில் தியாகராஜ பாகவதர் தான் சூப்பர் ஸ்டாராக இருந்தார். ஆனால் அவரை ஏழிசை மன்னர் என நாம் அழைத்தோம். அடுத்து எம்ஜிஆர் சூப்பர் ஸ்டாராக இருந்தார். அவரை மக்கள் திலகம் என்று தான் அழைத்தோம்.

ஆனால் ரஜினியை மட்டும் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறுகிறோம். அவரை மக்கள் திலகம் என்று சொன்னால் நன்றாக இருக்காது. உலக நாயகன் என்றால் கமல்ஹாசன் தான். அவரை நடிகர் திலகம் என்று சொன்னால் நன்றாக இருக்காது. அப்படி பார்த்தால் தளபதி விஜய், தல அஜித் என்று தான் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு எப்படி போட்டி போட முடியும் என தெளிவாக பேசியுள்ளார். இதன் மூலம் சரத்குமார் பேச்சுக்கு அவர் நோஸ்கட் செய்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.