தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணி என்றாலே வெற்றி கூட்டணி என்ற பெயர் கோலிவுட் வட்டாரங்களில் இருந்து வருகின்றன. இவர்கள் கூட்டணியில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் காலம் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
எனவே மயக்கம் என்ன படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து இருவரும் நானே வருவேன் படத்தின் மூலம் மீண்டும் இணைத்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் தனுஷ் இரட்டை வேடங்களில் மிரட்டிய இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார்.
இந்நிலையில் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த இப்படம் செப்டம்பர் 29 ஆம் தேதி திரையில் வெளியானது. படத்திற்கு என்னதான் சில கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பொதுவாக படம் நன்றாக இருப்பதாகவே பேசப்பட்டு வருகின்றது.
ஆனாலும் இப்படம் பொன்னியின் செல்வன் படத்துடன் வெளியானதால் நானே வருவேன் படத்தின் வசூல் கடுமையாக பாதித்துள்ளதாக தெரிகின்றது. பொன்னியின் செல்வன் போன்ற இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருந்த படத்துடன் நானே வருவேன் ஏன் வெளியானது என பலரும் கேள்வி கேட்டு வந்தனர்.
தற்போது அந்த கேள்விக்கு இயக்குனர் செல்வராகவன் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, அந்த காலத்தில் ஒரே நேரத்தில் பல படங்கள் வெளியாகும். அப்போது ரசிகர்களுக்கு அது ஒரு திருவிழாவை போல இருக்கும். ஆனால் அந்த ட்ரெண்ட் தற்போது மாறியுள்ளது.
எனவே அதை நானே வருவேன் படத்தின் மூலம் திரும்ப கொண்டுவர முயற்சித்தோம். மேலும் தொடர் விடுமுறை என்பதால் இரண்டு படங்களையும் ரசிகர்கள் திரையில் பார்ப்பார்கள் என எண்ணி படத்தை வெளியிட்டோம். அதை தவிர மிகப்பெரிய படமான பொன்னியின் செல்வன் படத்துடன் போட்டிபோட நானே வருவேன் படத்தை வெளியிடவில்லை என்றார் செல்வராகவன்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.