10 வருட ஏக்கம்…. 42 வயசில் இரட்டை குழந்தை பெற்ற நடிகை உருக்கம்!

ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் ஜூலி என்ற கேரக்டரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் விசாலாட்சி. இவரது நிஜ பெயர் விசாலாட்சி தான் என்றாலும் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வருவதற்கு ஜூலி தான். அந்த அளவுக்கு இந்த சீரியல் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது .

முன்னதாக சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டர்களின் நடித்து வந்த அவர் டான்சராகவும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.

இவருக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தார். குழந்தை இல்லாதது குறித்து நாங்கள் மிகுந்த மன வருத்தப்பட்டு இருந்தோம் என பேட்டி ஒன்றில் கூட தெரிவித்திருந்தார் .

முன்னதாக எங்களுக்கு இரண்டு முறை குழந்தை நின்றது. இரண்டு முறையும் அபாசன் ஆகிவிட்டது. அதன் பின்னர் பல பேர் எங்களுக்கு குழந்தை இல்லை என்பது குறித்து விமர்சிப்பார்கள். ஆனால், நாங்கள் அதை பெரிதாக மனதில் எடுத்துக் கொள்ளாமல் வாழ்க்கையில் தொடர்ந்து வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருந்தோம் .

குழந்தை இல்லாத சமயத்தில் என்னுடன் சேர்ந்து எனது கணவரும் மிகுந்த வேதனைப்படுவார். எனக்கு முதல் குழந்தை 45 நாட்களில் கலைந்து விட்டது. அதன் பிறகு இரண்டாவது குழந்தை கருப்பையில் இல்லை ட்யூபில் இருக்கிறது எனக் கூறிய அபார்ஷன் செய்து விட்டார்கள்.

அப்போது அபார்ஷன் ஆன குழந்தை எடுத்து என் கணவரின் கையில் கொடுத்த போது அவர் கதறி அழுது விட்டார் என ஜூலி பேட்டி ஒன்றில் மிகவும் உருக்கத்தோடு பேசி இருந்தார்.

இப்படியான நேரத்தில் கர்ப்பமாக இருந்த ஜூலிக்கு அண்மையில் வளைகாப்பு விழா நடந்தது. இதை அடுத்து ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை என இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார் ஜூலி.

10 வருடங்கள் குழந்தை இல்லாமல் மிகுந்த வேதனைக்கு உள்ளாகிய ஜூலிக்கு இரட்டிப்பு சந்தோஷமாக இரட்டை குழந்தைகளை கொடுத்திருக்கிறார் கடவுள். இதை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Anitha

Recent Posts

நீங்கள் முதலில் Shut Up பண்ணுங்க? DNA படத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறனை ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்!

ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…

57 minutes ago

சிறுமியை கவ்விச் சென்ற சிறுத்தை.. தேடிச் சென்ற வனத்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச்…

2 hours ago

இனியும் இபிஎஸ் பற்றி இழிவு செய்தால்.. அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை!

தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில்…

2 hours ago

மதுரை முருகன் மாநாட்டில் சூப்பர் ஸ்டார்? உறுதிப்படுத்திய ரஜினிகாந்த் தரப்பு?

மதுரை முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜுன் 22) மதுரையில் அமைந்துள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.…

2 hours ago

விரும்புகிற தெய்வங்களை அவரவர் வணங்குவது ஜனநாயக உரிமை.. முருகர் மாநாட்டுக்கு வாழ்த்துகள் : இபிஎஸ் அதிரடி!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…

3 hours ago

தலைவர் மாதிரி பேசுறதுக்கு இன்னும் பயிற்சி வேணும்? தனுஷை கண்டபடி கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்…

கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…

3 hours ago

This website uses cookies.