சிறு வயது முதலே சீரியல் தொடர்கள், திரைப்படங்கள் என நடித்து அதன் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை நீபா. இவர் பிரபல நடன கலைஞர்கள் வாமன் மற்றும் மாலினியின் மகள். துணை கதாபாத்திரங்களில் அதிகம் நடித்துள்ள இவர், மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர்.
பின்னர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காவியாஞ்சலி என்னும் தொடர் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த இவர், விஜய் டிவி, சன் டிவி என பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். காவலன், பேரன்பு, கபடதாரி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பின்னர், நடிக்காமல் இருந்து வந்த இவர், தற்போது, ஜீ தமிழ் நடத்தும் ‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சியில் தனது மகளுடன் பங்கேற்றார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகர் விஜய் உடன் பணியாற்றியது குறித்து அவர் பேசிய சில தகவல்கள் செம வைரலாகி வருகிறது.
அப்போது பேசிய அவர், “‘காவலன்’ படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடியே விஜய் சார் உடன் நான் வொர்க் பண்ணியிருக்கேன். ஸ்ரீதர் மாஸ்டர்கிட்ட அசிஸ்ட்டென்டா இருந்தப்போ, புதிய கீதை’ படத்துல
மெர்க்குரி பூவே’ பாட்டுல வொர்க் பண்ணுனேன். அப்போ, நான் ரொம்ப சின்னப் பொண்ணு. மீரா ஜாஸ்மின் மேடம் ஆடவேண்டிய டான்ஸ் மூவ்மென்ட்டை, அவங்களுக்கு நான்தான் ஆடிக் காட்டுவேன். அதுமட்டுமில்ல, டூயட்டுங்கிறதால, விஜய் சாரோட சேர்ந்தும் ஆடிக் காட்டுவேன்.
ஷூட்டிங் முடிஞ்சோன விஜய் சாரோடு ஓடிப் பிடிச்சு விளையாடுவோம். அதுக்கப்பறம் கிட்டத்தட்ட 8 வருஷம் அப்புறம் காவலன்’ ஷூட்டிங்கில தான் பார்த்தேன். அதுக்கு நடுவுல அவரைப் பார்க்கவே இல்ல. என்னை ஞாபகம் இருக்குமான்னு தெரியாமத்தான் பேசப்போனேன். என்னைப் பார்த்தோன,
உன் பேரு பிரியாதானே.. ஏன் நீபானு மாத்திக்கிட்ட’னு கேட்டார்.
எனக்கு செம ஷாக். `உங்களுக்கு இன்னும் என்னை ஞாபகம் இருக்கா’னு கேட்டேன். அப்போதான் புரிஞ்சது, பெரிய லெவலுக்குப் போன எந்த ஒரு நடிகரும் பழசை மறக்க மாட்டாங்க. அதுனாலதான் அவங்க அந்த லெவல்ல இருக்காங்கன்னு.” என நீபா பேசியுள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.