சின்னத்திரையில் நுழைந்த சில காலங்களிலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆன இவர் அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தார்.
பிரவீன் பென்னட் இயக்கிய ராஜா ராணி தொடரில் சஞ்சீவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. தனது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஆல்யா தனது காதலன் சஞ்சீவை திருமணம் செய்தார்.
இவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஷ் என இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். அண்மையில் தான் இரண்டாவது மகன் பிறந்தார், குழந்தை பிறந்ததற்கு பிறகு ஆல்யா மானசாவின் உடல் எடையும் அதிகரித்தது. முன்னதாக, புதிய சீரியலில் கமிட்டாகி இருக்கும் ஆல்யா 2 மாதத்தில் 10 கிலோ வரை எடையை குறைத்து ஆச்சரியப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், ஆல்யா இனியா சீரியலிலும், நடிகர் சஞ்சீவ் கயல் என்ற தொடரிலும் நடித்து வருகின்றனர். இந்த இரண்டு தொடர்களும் சன்டிவியில் தான் ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆல்யா விவாகரத்து செய்தி வரும் போதெல்லாம், நாங்கள் சிரித்துக் கொண்டுதான் இருப்போம். பெரிதாக எந்த ரியாக்ஷனும் கொடுக்கப் போவது இல்லை. அதேபோல், கூடவே இருந்து சிலர் ஏமாற்றுவதை பார்த்து ஆரம்பத்தில் கோபப்பட்டு இருந்தேன். பழிவாங்க வேண்டும் என்றெல்லாம் ஆரம்பத்தில் நினைப்பேன் இப்போது அந்த சிந்தனை இல்லை என பேசியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.