ஒரு சில வருடங்களுக்கு முன்பு நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் பெரிய அளவில் ஹிட்டான வம்சம் சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீரியல் வட்டாரத்தில் பிரபலமானவர் சந்தியா ஜகர்லமுடி.
மேலும், இவர் சந்திரலேகா போன்ற சீரியல்களிலும் நடித்திருந்தார். இப்போது இவர் சீரியல் பக்கம் தலை காட்டாமல் தெரு நாய்களை பாதுகாத்து வரும் பணியை செய்து வருகிறார். அண்மையில், இவர் தனது வாழ்க்கையில் நடந்த மோசமான விஷயம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதாவது, 2006 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் செல்லமடி நீ எனக்கு டைட்டில் பாடல் கோவில் யானையுடன் எடுக்கப்பட்டதாம். அப்போது, யானை தன்னை மோசமாக தாக்கியதாகவும், அதனால் தனக்கு ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சில பாகங்களை அகற்ற நேர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், யானைத் தன்னை தூக்கி நசுக்கிய போது உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் தான். எனவே, தன்னால் வலி தாங்க முடியாமல் தான் துடித்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு சிலர் தன்னை தூக்கிக்கொண்டு ஓடியதாகவும், அப்போது தன்னை தூக்கிக் கொண்டு போன டான்ஸர்களின் ஒருவன் தான் வலியால் துடித்துக் கொண்டிருக்கும் போது கூட தனக்கு உதவி செய்வது போல் நடித்து தன்னுடைய மார்பில் கை வைத்து அசிங்கமாக நடந்து கொண்டதாகவும், தன் வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்றால் அதைத்தான் தான் சொல்வேன் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.