துணிவின் வாரிசு பிறந்தநாளுக்கு முத்தம் கொடுத்து வாழ்த்திய ஷாலினி : வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்..!

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘துணிவு’. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் ‘சில்லா சில்லா’, ‘காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த மாதம் பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நடிகர் அஜித் குமாரின் மனைவி நடிகை ஷாலினி (இன்ஸ்டாகிராம்) சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். மேலும் பிரான்ஸ் நாட்டில் கடந்த ஜூலை மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்களையும் அப்போது வெளியிட்டு இருந்தார்.

பின்னர் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலினி அஜித்குமார் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதில் நடிகர் அஜித் குமார், மகள் அனோஷ்கா ஆகியோருடன் ஷாலினி உள்ளார். மேலும் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் எடுத்த புகைப்படங்களையும் நடிகை ஷாலினி அஜித்குமார் பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில் மகள் அனோஷ்காவின் 15-வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டார்லிங்” என‌ நடிகை ஷாலினி பதிவிட்டுள்ளார். மேலும் மகள் அனோஷ்கா உடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.