சினிமா / TV

கேம் சேஞ்சர் ஒருவேளை.. ஷங்கர் உடைத்த சீக்ரெட்.. கொதிப்பில் ரசிகர்கள்!

கேம் சேஞ்சர் திரைப்படத்தை இன்னும் நன்றாக பண்ணியிருக்கலாம் என ஷங்கர் கூறியது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

சென்னை: இது தொடர்பாக சமீபத்தில் இயக்குநர் ஷங்கர் அளித்துள்ள பேட்டியில், “அனைத்து இயக்குநர்களுக்கும் தாங்கள் என்ன செய்தாலும் திருப்தி வராது.‘கேம் சேஞ்சர் இன்னும் நன்றாக பண்ணியிருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. படத்தின் நீளத்தைக் குறைக்க நிறைய நல்லக் காட்சிகளை எடுத்துவிட்டோம்.

ஏனென்றால், படத்தில் அவ்வளவு காட்சிகளையும் வைக்க முடியாது. ஆனால், அவை அனைத்துமே இந்தக் கதைக்குள் தான் வருகிறது. மொத்தமாக 5 மணி நேரக் காட்சிகள் இருந்தது” எனத் தெரிவித்துள்ளார். ஷங்கரின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்வினைகளைப் பெற்று வருகிறது.

முன்னதாக, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஷ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் கேம் சேஞ்சர். ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம் மற்றும் அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு தமன் இசை அமைத்திருந்தார்.

இந்த நிலையில், பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 10ஆம் தேதி வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம், கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இப்படத்தின் HD PRINT இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் இப்படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கல்குவாரியில் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்.. விசாரணையில் பகீர் தகவல்!

மேலும், ஷங்கர் இயக்கத்தில் இதற்கு முன்னதாக வெளியான இந்தியன் 2 படமும் எதிர்மறையான விமர்சனங்களையேப் பெற்றது மட்டுமல்லாமல், ஷங்கர் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கருத்துகள் எழுந்தன. எனவே, நேரடி தெலுங்கு படமான கேம் சேஞ்சர் திரைப்படமும் கலவையான விமர்சனங்களைப் பெறுவது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.