தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான். தனது “எந்திரன்” திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்தவர்.
ஆனால் சமீப காலமாக இவரது திரைப்படங்கள் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமையவில்லை. குறிப்பாக இவர் இயக்கிய “இந்தியன் 2” திரைப்படம் இவரது கெரியரிலேயே மிகப்பெரிய தோல்வியை கண்டது. அதனை தொடர்ந்து வெளிவந்த “கேம் சேஞ்சர்” திரைப்படமும் சரியாக போகவில்லை. தற்போது “இந்தியன் 3” திரைப்படத்தை உருவாக்கி வரும் ஷங்கர், அடுத்ததாக “வேள்பாரி” நாவலை படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது.
“இந்தியன் 2”, “கேம் சேஞ்சர்” போன்ற திரைப்படங்களின் தோல்விகள் காரணமாக டாப் நடிகர்கள் பலரும் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க தயங்குவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றனவாம். ஷங்கர் “வேள்பாரி” திரைப்படத்தை இயக்குவதற்கான முயற்சிகளில் இருந்தாலும் “இந்தியன் 3” திரைப்படத்தை அவர் இயக்கப்போகும் திரைப்படம் குறித்த எந்த தகவலும் இல்லை எனவும் கூறுகின்றனர். தமிழின் பிரம்மாண்ட இயக்குனரின் நிலை இப்படி ஆகிவிட்டதே என கோலிவுட் வட்டாரங்களில் சோக அலை வீசி வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.