தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வாரிசு குடும்பத்தில் இருந்து திரைத்துறையில் அறிமுகமான பலர் திறமையில்லாததால் பெரிய படங்களின் வாய்ப்புகள் கிடைத்தும் அடையாளம் தெரியாமல் போயியுள்ளனர். அந்த லிஸ்டில் இடம்பிடித்திருக்கும் வாரிசு நடிகர் தான் சாந்தனு பாக்யராஜ். இவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜின் ஒரே மகன் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
1998ஆம் ஆண்டு வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாந்தனு 2008ஆம் ஆண்டு சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தின் கதை முதலில் நன்றாக இருந்ததாம். ஆனால் மகனின் முதல் படம் மாபெரும் ஹிட் அடிக்கவேண்டும் என எண்ணிய பாக்யராஜின் அந்த கதையில் குறுக்கிட்டு சில மாற்றங்களை செய்யவே அது பிளாப் ஆகிவிட்டதாம். இதனால் அவர் தோல்வி பட ஹீரோவாக முத்திரைகுத்தப்பட்டு எழுந்திரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதனிடையே பிரபல தொகுப்பாளனியான கிகி விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் அண்மையில் வெளிவந்த ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்தது பற்றி சாந்தனு பல விஷயங்கள் குறித்து பேசினார்கள். அப்போது சாந்தனு தனக்கு குழந்தை இல்லாதது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். எங்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகியும் நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. அது எங்கள் தனிப்பட்ட விஷயம்.
ஆனால், அதற்காக சமூகத்தின் பார்வை எங்கள் மீது வேறு மாதிரி இருக்கிறது. கிகி ஒரு திருமணத்துக்கு கூட போக முடியவில்லை என்றும் எங்கே போனாலும் சில பூமர் ஆன்டிகள் நைஸாக வந்து குழந்தை எப்போன்னு கேட்டு டார்ச்சர் பண்றாங்க. அவர்களாகவே ஒரு கற்பனை செய்துக்கொள்கிறார்கள். எங்களுக்கு குழந்தையே பிறக்காது என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள். அது வரும்போது வரும். தயவுசெய்து அடுத்தவர்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் தலையிடாதீர்கள் என அதிரடியாக பதில் அளித்துள்ளனர்.
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
This website uses cookies.