பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இளம் நடிகையான ஷெர்லின் சோப்ரா. இவர் இயக்குனர் சஜித் கான் மீது பாலியல் தொல்லை வழக்கை தொடுத்திருக்கிறார்.
இது போன்ற பல மீடூ புகார்களை கொடுத்த நடிகைகளின் வரிசையில் ஷெர்லின் சோப்ராவும் ஒருவர் என்று சொல்லலாம். இவர் நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளராகவும் விளம்பர உலகில் அலங்கார நடிகையாகவும் இருக்கிறார்.
மேலும் இளம் நடிகையான ஷெர்லின் சோப்ரா பிரேபாய் என்ற பத்திரிக்கையில் ஆடையின்றி தோன்றிய முதல் இந்திய பெண் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டிவி நிகழ்ச்சியில் இவர் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
அந்த வகையில் இவர் பாலிவுட் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் 2002 ஆம் ஆண்டு யுனிவர்சிட்டி என்ற படத்தில் நடித்த இவர் 2014 இல் வெளிவந்த காமசூத்திரா என்ற ஆங்கில படத்தில் இவர் நடித்திருக்கிறார். இதன் மூலம் மிகப் பிரபலமான நடிகை என்ற அந்தஸ்தை அடைந்தார்.
சமூக வலைதளங்களிலும் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரக்கூடிய இளம் நடிகையான ஷெர்லின் சோப்ராவின் பார்வை மற்றும் பேச்சு எப்போதும் வித்தியாசமாகவே இருக்கும் என்று கூறலாம்.
புரட்சிகரமான கருத்துக்களை கூறுவதாக எண்ணி இதுவரை பெண்களின் கட்டுப்பாட்டை மீறி இவர் சில செயல்களில் ஈடுபடுவது நமது கலாச்சாரத்தை உடைக்கும் எண்ணத்தில் தான் இளம் நடிகையான ஷெர்லின் சோப்ரா இருக்கிறாரோ என்று எண்ண தோன்றும்.
அந்த வரிசையில் முதல் முதலாக நிர்வாண போஸ் கொடுத்த இவரைப் பற்றி நிறைய ட்ரோல்களும் விமர்சனங்களும் எழுந்தபோதும் அதைப் பற்றி கவலைப்படாமல் தான் எதை நினைத்து ஓடுகிறோமோ அதை நினைத்து தான் செல்ல வேண்டும் என்ற பாணியில் இளம் நடிகையான ஷெர்லின் சோப்ரா நடந்து கொண்ட விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த வகையில் ஷெர்லின் சோப்ரா சமீபத்தில் கூறியிருக்கும் ஒரு விஷயம் அனைவரையும் முக்காட வைத்துவிட்டது என்று கூறலாம்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தா இவர் பட வாய்ப்புக்காக ஒரு முறை பிரபல இயக்குனர் ஒருவரை சந்திக்க சென்றபோது உன்னுடைய உள்ளாடையை கழட்டி என் டேபிள் மீது என்று கூறினார். ஆனால், நான் முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டேன்.
அதன் பிறகும், இதை மட்டும் செய்தால் போதும் உங்களுக்கு பட வாய்ப்பு கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்று கூறினார் அப்படியான படவாய்ப்பு எனக்கு தேவையில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன் என்று பகீர் கிளப்பினார் இளம் நடிகையான ஷெர்லின் சோப்ரா.
இப்படி கூறிய இவரேதான் சமீபகாலமாக தன்னுடைய மோசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.