சினிமா / TV

இத சொல்றதுக்கு எனக்கு வெட்கமாகவே இல்லை- 46 வயது தங்கைக்கு மாப்பிள்ளை தேடும் நடிகை?

50 வயதானாலும்…?

பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக வலம் வந்த நடிகைதான் ஷில்பா ஷெட்டி. இவர் 1993 ஆம் ஆண்டு ஷாருக்கானின் “பாஸிகர்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் “மிஸ்டர் ரோமியோ” திரைப்படத்தில் நடித்திருந்த இவர், “குஷி” திரைப்படத்தில் ‘மேக்கரினா’ என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். 

இளம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த இவர், 2009 ஆம் ஆண்டு ராஜ் குண்ட்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. இவருக்கு தற்போது 50 வயது. ஆனாலும் தனது உடலை சிக்கென்று மெயின்டெயின் செய்து வருகிறார். இந்த நிலையில் ஷில்பா ஷெட்டி தனது தங்கையான ஷமிதா ஷெட்டிக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருவதாக வெளிப்படையாக பேசியுள்ளார். 

46 வயது தங்கை

ஷில்பா ஷெட்டியின் தங்கையான ஷமிதா ஷெட்டியும் பிரபல நடிகைதான். இவர் ஹிந்தியில் “மொஹப்பட்டைன்” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில், விஜயகாந்தின் “ராஜ்ஜியம்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவருக்கு 46 வயது ஆகிறது. ஆனால் இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஷில்பா ஷெட்டி, “இதை சொல்வதற்கு நான் வெட்க்கப்படவில்லை. நான் பல Most Eligible ஆன ஆண்களிடம் நேரடியாகவே சென்று உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என கேட்பேன். எனது தங்கைக்காக கேட்கிறேன் என்பதை அவர்களுக்கு தெரிவிப்பேன். டேட்டிங் செயலியில் இணைந்துகொள் என்று கூட எனது தங்கையிடம் ஒரு முறை கூறியிருக்கிறேன்” என அப்பேட்டியில் மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். ஷில்பா ஷெட்டியின் பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.