கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் இருப்பது சமீபத்தில் உறுதியானது.இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியாகி சோகத்தில் மூழ்கியது.
ரசிகர்கள் பலர் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை பண்ணி வருகின்றனர்.இந்த நிலையில் சிகிச்சைக்காக தனது மனைவி மற்றும் மகளுடன் அமெரிக்கா சென்று அங்கே உள்ள “மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில்” அறுவை சிகிச்சை செய்ய போவதாக பெங்களூர் விமானநிலையத்தில், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
அதன்படி கடந்த 25 ஆம் தேதி அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாக மருத்துவர் மனோகர் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: அட்டகாசகமாக வெளிவந்த விடாமுயற்சி “Sawadeeka”பாடல்…இருங்க பாய் இது ஆரம்பம் மட்டும் தான்..!
மேலும் அந்த வீடியோவில் சிவராஜ்குமாரின் சிறுநீர்ப்பை அகற்றப்பட்டு,அவருடைய குடலின் ஒரு பகுதியை பயன்படுத்தி செயற்கை சிறுநீர்ப்பை பொறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.அறுவைசிகிச்சைக்கு பின்பு அவர் நலமுடன் இருப்பதாகவும்,சிறிது நாட்கள் ஓய்வு தேவைப்படுவதால்,அவர் அமெரிக்காவில் தற்போது தங்கியுள்ளார் என்ற தகவலையும் தெரிவித்தார்.
மேலும் சிவராஜுக்குமாரின் மனைவி அவருக்காக பிரார்த்தனை பண்ண அணைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களுடைய நன்றிகள் என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.