இந்திய சினிமாவில் 70 மற்றும் 80 காலகட்டங்களில் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை ஜெயப்பிரதா. தெலுங்கு திரைப்படமான பூமி கோஷம் என்ற திரைப்படத்தில் மூன்று நிமிடம் நடனக்காட்சியில் அறிமுகமானவர் ஜெயப்பிரதா. இவர் 1976 ஆம் ஆண்டு பாலச்சந்திரனின் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கமல் ரஜினி ஆகியோருடன் இணைந்து நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, தசாவதாரம் போன்ற பல படங்களில் ஜெயப்பிரதா நடித்துள்ளார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர்.
இவர் பல்வேறு மொழிகளில் 280 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் சிறந்து விளங்கிய ஜெயப்பிரதா பரதநாட்டிய கலைஞராகவும் சாதனை செய்துள்ளார். இவர் தற்போது அரசியலில் குதித்து அதில், தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஜெயப்பிரதா நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான ESI தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என தொழிலாளர்கள் புகார் அளித்திருந்த நிலையில், அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, இந்த வழக்கின் விசாரணையை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.