நாதஸ்வரம் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி ஷண்முகப்பிரியா. இதனைத் தொடர்ந்து இவர் சிறிது கால இடைவெளிக்கு பின்னர் வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமானார்.
மேலும் படிக்க: இதுக்கு இல்லையா சார் ஒரு END?.. பெரிய இடத்து பெண்ணுடன் சிம்புவுக்கு விரைவில் திருமணம்..!
கடந்த ஆண்டு பாடிபில்டரும், உடற்பயிற்சியாளருமான அரவிந்த் சேகர் என்பவரை எளிய முறையில் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
திருமணம் ஆகி இருவரும் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பு பிரச்சினையால் மரணம் அடைந்தார்.
மேலும் படிக்க: ஏமாற்றி சொகுசு வாழக்கை வாழ்ந்த சைந்தவி?.. ஜீவனாம்சமாக கொட்டிக் கொடுத்த GV.. சர்ச்சையை கிளப்பும் பிரபலம்..!
சமீபத்தில் தன் கணவருடன் இணைந்து ஒரு விளம்பர வீடியோவை எமோஷனலாக ரீல்ஸ் செய்து வெளியிட்டிருந்த நிலையில், அவரது கணவர் மரணம் சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருந்தது.
இந்நிலையில், கணவர் இழப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து ஸ்ருதி இப்போது, சன் டிவியில் ஒளிபரப்பாகும் இலட்சுமி தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் தனது இரண்டாவது திருமண நாளை தற்போது, கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு ஒரு எமோஷனல் பதிவு போட்டுள்ளார். அதில், அவர் முதல் முறையாக நீ இல்லாமல் திருமண நாளை கொண்டாடி வருகிறேன். நீ என் அருகில் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்த உலகம் நீ இல்லாத திருமண நாளை கொண்டாடுவதாக கூறினால், நீ என் பக்கத்தில் இருப்பது போல நான் நினைக்கிறேன். நீ எப்போதுமே என் அருகில் இருப்பாய் என்று முழுமையாக நம்புகிறேன் என்று பதிவு போட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதா இல்லை ஆறுதல் சொல்வதா என்பது எங்களுக்கு தெரியவில்லை என்பது போன்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.