நாதஸ்வரம் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி ஷண்முகப்பிரியா. இதனைத் தொடர்ந்து இவர் சிறிது கால இடைவெளிக்கு பின்னர் வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு பாடிபில்டரும், உடற்பயிற்சியாளருமான அரவிந்த் சேகர் என்பவரை எளிய முறையில் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
திருமணம் ஆகி இருவரும் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தனர். ஸ்ருதி ஷண்முகபிரியா – அரவிந்த் ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பேமஸ் ஆனவர்கள். இந்நிலையில், திடீரென ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பு பிரச்சனையால் நேற்று மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி சீரியல் வட்டாரத்தில் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கணவரை பிரிந்த ஸ்ருதி சண்முகப்பிரியா கணவருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான ரொமான்டிக் போட்டோ ஒன்றை வெளியிட்டு, பிரிந்த உடல் தான். ஆனால், உங்கள் ஆன்மாவும் மனமும் என்னைச் சூழ்ந்து இப்போதும் என்றென்றும் பாதுகாக்கிறது! என் அன்பே அரவிந்த்சேகர்… உங்கள் மீதான என் அன்பு இப்போது மேலும் மேலும் அதிகரித்து வருகிறது, நாங்கள் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நரக நினைவுகளை வைத்திருந்தோம், அதை நான் வாழ்நாள் முழுவதும் மதிக்கிறேன். உன்னை மிஸ் பண்ணுகிறேன் மேலும் உன்னை நேசிக்கிறேன் அரவிந்த்! என் அருகில் உங்கள் இருப்பை உணர்கிறேன் என ரொமான்டிக் பதிவு போட்டு எல்லோரது மனதையும் உருக்கி விட்டார்.
அதன் பின்னர் சற்று முன் தன் கணவரின் மர்ம செய்தி குறித்து உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”என் கணவர் அரவிந்தின் இறப்பு குறித்து பலரும் தொலைப்பேசி வாயிலாகவும், நேரிலும் இரங்கல் தெரிவித்து ஆதரவு கொடுத்ததற்கு நன்றி. அவர் எப்போதும் என்னுடன் தான் இருக்கிறார். இந்த துயரமான நேரத்திலும் கூட இப்படி ஒரு வீடியோவை வெளியிடுவதற்கான காரணத்தை நான் சீக்கிரமாக சொல்லிவிடுகிறேன்.
யூடியூப் சேனல்களில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தேவையற்ற தகவல்களை பரப்பி வருகிறார்கள். உங்களுக்கு தேவைப்பட்டால் இப்போது நான் பேசுவதையே எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள். தெரியாத தகவல்களை பேசி என் குடும்ப உறுப்பினர்களை கஷ்டப்படுத்த வேண்டாம். எல்லாரும் வயதனாவர்கள். நாங்கள் மீண்டு வருகிறோம். அவர் இறந்தது மாரடைப்பால் தான். ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்த போது இறந்துவிட்டார் என்று பரப்ப வேண்டாம். ஒரு சிவில் இன்ஜினியர். உடல் ஃபிட்னஸில் அவருக்கு ஆர்வம் அதிகம் அவ்வளவு தான். இதைவிட்டுவிட்டு தவறான செய்திகள் பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என கெஞ்சி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு ட்ரெக்கிங் என்ற திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
This website uses cookies.