சினிமா / TV

ராஜேஷின் மரணத்திற்கு இந்த நபர்தான் காரணமா? பகீர் கிளப்பிய சகோதரரின் பேட்டி!

ராஜேஷ் மரணம்

இன்று காலை தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவமாக அமைந்துள்ளது நடிகர் ராஜேஷின் மரணச் செய்தி. கிட்டத்தட்ட 150க்கும் மேலான திரைப்படங்களில் நடித்த நடிகர் ராஜேஷ், “ஓம் சரவண பவ” என்ற யூட்யூப் சேன்னலையும் நடத்தி வந்தார். மேலும் ரியல் எஸ்டேட், ஹோட்டல் ஆகிய தொழில்களிலும் ஈடுபட்டு வந்தார். 

இவர் சினிமா குறித்த பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். இந்த நிலையில் இன்று காலை உடல் நிலை சரியில்லாமல் போன நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. 

தாமதமாக்கிய சித்த மருத்துவர்

இந்த நிலையில் ராஜேஷின் இரங்கல் கூட்டத்தில் பத்திரிக்கையாளருக்கு பேட்டியளித்த ராஜேஷின் சகோதரர் சத்யன், “அண்ணன் பைபாஸ் சர்ஜரி செய்திருந்ததால் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வருவார். இன்று காலை 6 மணிக்கு என்னை அண்ணன் அழைத்திருந்தால் நான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பேன். 

ஆனால் காலை 6 மணிக்கு ஒரு சித்தா டாக்டர் வந்தார். அவர் பேசி பேசியே 8 மணி வரை நேரத்தை கடத்திவிட்டார். அதன் பிறகுதான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். நெஞ்சு வலி இருப்பதாக அண்ணன் கூறவில்லை. இரவு முழுவதும் தூங்கவில்லை. காலை 6 மணிக்கு அசௌகரியமாக உணர்ந்த பின் தாமதமாக மருத்துவமனையில் அனுமதித்ததுதான் தவறாகிப்போனது” என கூறி பகீர் கிளப்பியுள்ளார். நடிகர் ராஜேஷ் சித்த மருத்துவ முறையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.