சினிமா / TV

உங்க சங்காத்தமே வேண்டாம்- ஆகாஷ் பாஸ்கரனுக்கு டாட்டா காட்டும் சிம்பு? அப்போ STR 49 நிலைமை?

டாஸ்மாக் முறைகேடு

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விவகாரத்தில் திமுகவுக்கு நெருக்கமான பல பெரும்புள்ளிகளுடன் ஆகாஷ் பாஸ்கரனின் பெயரும் சிக்கியது. அதன்படி ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதாக செய்திகள் தெரிவித்தன. 

ஆகாஷ் பாஸ்கரன் தனது “Dawn Pictures” நிறுவனத்தின் மூலம் தனுஷை வைத்து “இட்லி கடை”, சிம்புவை வைத்து “STR 49”, சிவகார்த்திகேயனை வைத்து “பராசக்தி” ஆகிய மூன்று திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அதன் படி சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ் ஆகிய மூவருக்கும் ஆகாஷ் பாஸ்கரன் ரொக்கமாக பல கோடி ரூபாய் கொடுத்ததற்கான ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகிய மூவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்க சங்காத்தமே வேண்டாம்

அமலாக்கத்துறை வளையத்தில் ஆகாஷ் பாஸ்கரன் சிக்கியுள்ள நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் “இட்லி கடை”, “பராசக்தி”, “STR 49” ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சிம்பு தனது 49 ஆவது திரைப்படத்தை வேறு தயாரிப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சிக்கியுள்ள ஆகாஷ் பாஸ்கரனால் தனது 49 ஆவது திரைப்படம் டேக் ஆஃப் ஆவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆதலால் வேறு தயாரிப்பாளரை அணுக சிம்பு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

“STR 49” திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க சிம்பு, சந்தானம், கயாது லோஹர் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.