சினிமாத்துறையில், பரபரப்புக்கு என்றுமே பஞ்சம் இல்லாதவர் தான் நடிகர் சிம்பு, குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் சிறு வயதிலேயே கலக்கி இருப்பார்.
அவர் நடித்த மன்மதன், வல்லவன் போன்ற படங்கள், சினிமாத்துறையில் அவருக்கென்றே, ஒரு அங்கிகாரத்தைக் கொடுத்தது. பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்தாலும், படப்பிடிப்பிறகு தாமதமாக வருவது, இயக்குனர்களை மதிப்பதில்லை என, அவர் மீது பல குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. இதற்கிடையே பீப் பாடல் சர்ச்சை, தயாரிப்பளாருடன் பிரச்சனை என பல பிரச்சனைகளையும் சந்தித்து வந்தவர் தான் சிம்பு.
சினிமாவில், மட்டுமல்லாமல், காதல் வாழ்விலும் பல இன்னல்களையும், தோல்விகளையும் நடிகர் சிம்பு சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. வல்லவன் படத்தில் நயன்தாராவின் உதட்டைக் கடித்தபடி வெளியான போஸ்டர்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பின. இவரும் காதலிப்பதாகவும் தகவல் வெளியாகின. பின்னர் ஏதோ ஒரு காரணத்திற்காக இருவரும் பிரிந்தனர் என கூறப்பட்டு, காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
பின்னர், நடிகை ஹன்சிகாவுடன் மலர்ந்த காதல் வெறும் 6 மாதங்கள் மட்டுமே நீடித்தது. காரணம் எதுவும் கூறாமலே இருவரும் காதலை ரத்து செய்து கொண்டனர். இவ்வாறு தொடர் காதல் தோல்விகளின் காரணமாக மனம் நொந்த சிம்பு, கோவில் வழிபாடு, சினிமாத்துறையில் கவனம் செலுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளது.
இதனிடையே ஈஸ்வரன் படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நிதி அகர்வாலை காதலிப்பதாகவும், இருவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், இந்த ஜோடி தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராக இருப்பதாகவும், இருவரும் இணைந்து விரைவில் திருமண தேதியை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இரு தரப்பிலும் உறுதி செய்யப்படாத நிலையில், பிப்ரவரி -3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.