சினிமாத்துறையில், பரபரப்புக்கு என்றுமே பஞ்சம் இல்லாதவர் தான் நடிகர் சிம்பு, குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் சிறு வயதிலேயே கலக்கி இருப்பார். அவர் நடித்த மன்மதன், வல்லவன் போன்ற படங்கள், சினிமாத்துறையில் அவருக்கென்றே, ஒரு அங்கிகாரத்தைக் கொடுத்தது. பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்தாலும், படப்பிடிப்பிறகு தாமதமாக வருவது, இயக்குனர்களை மதிப்பதில்லை என, அவர் மீது பல குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. இதற்கிடையே பீப் பாடல் சர்ச்சை, தயாரிப்பளாருடன் பிரச்சனை என பல பிரச்சனைகளையும் சந்தித்து வந்தவர் தான் சிம்பு.
சினிமாவில், மட்டுமல்லாமல், காதல் வாழ்விலும் பல இன்னல்களையும், தோல்விகளையும் நடிகர் சிம்பு சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. வல்லவன் படத்தில் நயன்தாராவின் உதட்டைக் கடித்தபடி வெளியான போஸ்டர்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பின. இவரும் காதலிப்பதாகவும் தகவல் வெளியாகின. பின்னர் ஏதோ ஒரு காரணத்திற்காக இருவரும் பிரிந்தனர் என கூறப்பட்டு, காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
பின்னர், நடிகை ஹன்சிகாவுடன் மலர்ந்த காதல் வெறும் 6 மாதங்கள் மட்டுமே நீடித்தது. காரணம் எதுவும் கூறாமலே இருவரும் காதலை ரத்து செய்து கொண்டனர். இவ்வாறு தொடர் காதல் தோல்விகளின் காரணமாக மனம் நொந்த சிம்பு, கோவில் வழிபாடு, சினிமாத்துறையில் கவனம் செலுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளது.
இதனிடையே ஈஸ்வரன் படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நிதி அகர்வாலை காதலிப்பதாகவும், இருவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.. இந்நிலையில் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு நல்ல நாளில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.