ஒல்லி பெல்லி இடுப்பழகியாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் இடுப்பசைவால் ஆட்டி படைத்தவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார்.
1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் பெருந்தோல்வியை அடைந்தது. அதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.
தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கு முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஜோடி , பிரியமானவளே , பஞ்சதந்திரம் , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார். பின்னர் தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் சிம்ரன் தீபக் பக்காவை திருமணம் செய்வதற்கு முன்னர் ஒரு சில நடிகர்களை காதலித்தது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஆம், குறிப்பாக நடிகர் அப்பாஸ் -சிம்ரன் இருவரும் காதலித்து வந்தார்களாம். பூச்சூடவா படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட ஹெமிஸ்ட்ரி உண்மை காதலாக மாறிவிட்டதாம். அந்த சமயத்தில் இருவரது மார்க்கெட்டும் உச்சத்தில் இருந்ததால் அடுத்தடுத்த கொஞ்சம் படங்களில் நடித்துவிட்டு பின்னர் திருமணம் செய்துக்கொள்ளலாம் என திட்டமிட்டிருந்தார்களாம்.
ஆனால் , சிம்ரன் சினிமா நாளுக்கு நாள் கொடிகட்டி உச்சத்தில் பறந்தது. இதனால் அம்மணிக்கு மேன்மையான எண்ணங்கள் அதிகரிக்க கமல் போன்ற பெரிய நடிகர்கள் மீது க்ரஷ் வந்துவிட்டதாம். ஆனால் அப்பாஸ் , அப்படியே ரிவர்ஸில் முன்னணியில் இருந்து பின்னணிக்கு போனார். இதனால் சிம்ரன் அப்பாஸை கழட்டிவிட்டுவிட்டாராம். சிம்ரன் இல்லாமல் சினிமாவே இல்லை என்ற நிலை மாறியதால் சிம்ரனுக்கு அப்பாஸ் மீதிருந்த காதல் செல்லாக்காசு போல ஆகிவிட்டதாம்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.