இனி வடிவேலு அந்த விஷயத்திற்கு சரிபட்டு வரமாட்டார் : நாய் சேகர் ரீட்டர்ன்ஸ் குறித்து காமெடி நடிகர் அட்வைஸ்..!

தன்னுடைய நகைச்சுவையான பாடி லாங்குவேஜின் மூலம் தமிழ் சினிமாவில் உயந்த பல நடிகர்கள் உள்ளனர். நடிகர் சிங்கமுத்து அப்படி திறமை மிக்க காமெடி நடிகர்களில் ஒருவர் தான். இவரை போல வைகை புயல் வடிவேலு என்ற அந்தஸ்துடன் தமிழ் சினிமாவின் முதன்மையான காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. இவர்கள் இருவரும் முன்னதாக பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். ஆனால் நடிகர் வடிவேலு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கமுத்து நில மோசடி செய்து விட்டதாக நிதிமன்றத்தில் புகார் அளித்திருந்த நிலையில், இன்றும் முடிக்கப்படாமல் நிலுவையில் தான் உள்ளது அந்த வழக்கு.

இந்த நிலையில், நடிகர் சிங்கமுத்து பிரபல செய்தி ஊடகம் ஒன்றிக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் வடிவேலுவுடனான சண்டை பற்றியும் தன்னுடைய மகன் பற்றியும் சில விஷியங்களை பகிர்ந்து உள்ளார். அதில் நீதிமன்ற வழக்கை பற்றி கேட்ட போது அந்த வழக்கு வாய்தாவாக வாய்தாவாக வாங்கி இன்னமும் முடியாமல் இருந்து வருவதாகவும், ஒருமுறை நான் அந்த வழக்கின் போது வேண்டுமென்றே அவரின் பக்கத்தில் சென்று அமர்தேன். அப்போது அவர் என்னுடன் நேருக்கு நேராக சொல்லியிருக்கலாம் ஆனால் அவர் சொல்லவில்லை. ஏனென்றால் வடிவேலு சொன்னது பொய் என்று அவருக்கே தெரியும் என தெரிவித்துள்ளார்.

என்னுடைய மகன் கதாநாயகனாக வந்துவிட்டான் மேலும், அவருடைய மகன் கதாநாயகனாக வரவில்லை என்ற வயிற்றெரிச்சல் மற்றும், படம் கிடைக்கவில்லை என்றால் தன்னுடைய பணத்தை போட்டு படம் எடுக்க வேண்டியதுதானே என கேள்வி எழுப்பிய அவர், அது முதலில் மக்களுக்கு பிடிக்க வேண்டும் என்றும், அதற்கான முயற்சியைத்தான் செய்ய வேண்டும் எனவும், அதை தவிர்த்து மற்றவர்கள் மீது பொறாமை பட கூடாது என்று கூறினார்.

மேலும், சிங்கமுத்துவிடம் நாய் சேகர் ரீட்டர்ன்ஸ் திரைப்படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிரித்துக்கொண்டே நான் நாய் சேகர் ரீட்டர்ன்ஸ் பார்க்க வில்லை அனால் படம் பார்தவர்களின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. வடிவேலு அந்த படத்தில காமெடியன்கள் எல்லாம் இதோட முடித்தார்கள் என்று சொன்னார்.

எனக்கு இந்த படம் வெளியாவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே தெரிந்து விட்டது இந்த படம் ஓடாது என்றும், படத்தில் ஒருவர் மட்டும் காமெடி செய்தால் படம் ஓடாது என்றும், உதாரணமாக பத்து பேர் சேர்ந்து தேர் இழுத்தால்தான் தேர் பிரச்சனை இல்லாமல் நகரும் ஒருவர் மட்டும் இழுத்தால் இடையில் ஏதாவது பிரச்சனையாகிவிடும் என்று சிங்கமுத்து தெரிவித்தார்.

மீண்டும் வடிவேலுடன் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, எல்லாரும் பொழைக்குறக்காக ஏதாவது சொல்லிட்டு இருப்பாங்க என்றும், அது அவர்களுடைய குணம் இப்போதெல்லாம் பல பேர் பல விதமாக பேசுகிறார்கள் எனவும், வடிவேலு சும்மாவே இருந்திருக்கலாம், புலி வருது புலி வருதுன்னு கடைசியில் அவரே வீட்டிற்குள் சென்று விட்டார்.

வடிவேலு மனசு வீடக் கூடாது, இந்த படம் இல்லைனா மற்ற படங்களில் நடித்து அடுத்த படங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும் எனவும், முயற்சி செய்து ஒரு நண்பனாக சொல்கிறேன் எனவும், ஆனால் நட்பை களங்கப்படுத்திய உனக்கு எப்படி தெரியும் என்றும், நட்பு விஷயத்திற்கு அவர் சரிபட்டு வரமாட்டார், எனவும் அந்த பேட்டியில் காமெடி நடிகர் சிங்கமுத்து தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

5 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

5 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

6 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

6 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

6 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

7 hours ago

This website uses cookies.