தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.
இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா , பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா கடந்த 24ம் தேதி கொழும்பை வந்தடைந்தார். இதனிடையே, பவதாரணிக்கு நேற்று முன்தினம் திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பவதாரணி கொழும்பு லங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில், வியாழக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். புற்றுநோயுடன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதே உயிரிழப்புக்கான காரணம் என மருத்துவமனை கூறியது.
பவதாரிணி சபரிராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இவர்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லை என்பதால் பவதாரணியை கணவர் பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் பவதாரிணி தனது அப்பா இளையராஜாவுடன் மகழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இதனிடையே கடந்த ஓராண்டுக்கு முன் பவதாரணிக்கு பித்தப்பையில் கல் இருந்தது. அதற்காக சிகிச்சை எடுத்த போது அது, புற்றுநோயாக மாறி, சிறுநீரகத்திற்கும் பரவிவிட்டது.
இதற்காக பல சிகிச்சைகள் செய்த போதும் அதில் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. அனைத்து மருத்துவர்களும் கைவிட்ட நிலையில், கடைசியாகத்தான் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிந்து அங்கு சென்று சிகிச்சை எடுத்தால் சரியாகும் என்ற நம்பிக்கையில் சென்றுள்ளார். ஆனால், அங்கு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் துரதிஷ்டாவசமாக உயிரிழந்துவிட்டார். இதையடுத்து பண்ணை வீட்டில் பவதாரணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இளையராஜாவின் தாய் மற்றும் மனைவி சமாதிக்கு நடுவே உடலை அடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில் பவதாரணியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி பாடகியாக பல பாடல்களை பாடியுள்ள இவர் 10 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். சிறு வயதிலேயே பின்னணி பாடகியாக இருந்துவந்த பவதாரிணியின் முழு சொத்து மதிப்பு ரூ.300 முதல் ரூ. 350 கோடி என தகவல்கள் கூறுகிறது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.