சென்னையில் மண்டல வாரியாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியும் மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாருக்கு தாரை வார்த்து தரும் நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை ரிப்பன் மாளிகையின் முன் ஆறு நாட்களுக்கும் மேலாக பல தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு 500 லிட்டர் குடிநீர் பாட்டில்களை வழங்கியுள்ளார் பிரபல பாடகி சின்மயி.
சென்னை ரிப்பன் மாளிகையின் முன் பல நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்த பாடகி சின்மயி, தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு தண்ணீர் தேவைப்பட்ட நிலையில் 500 லிட்டர் குடிநீர் பாட்டில்களுடன் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தார் சின்மயி. இச்செயல் பலரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சின்மயியை பாராட்டி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் கே என் நேரு தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் போராட்டக்குழு நிர்வாகிகளுடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட பலரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.