சினிமா / TV

ஆண்ட்ரியா தான் கெடுத்தார்…. எனக்கு வாய்ப்பே கிடைக்காமல் போச்சு – சுசித்ரா புலம்பல்!

ஆங்கிலோ – இந்தியன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஆண்ட்ரியா ஜெர்மியா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி அதன் பிறகு நடிகையாக பச்சை கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் தனது வாழ்க்கையை தொடங்கினார். அதை எடுத்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் அவரது நடிப்பு பயணத்திற்கு மைல்கல்லாக அமைந்தது .

தொடர்ந்து ஆண்ட்ரியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. அடுத்து மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை , தரமணி, துப்பறிவாளன், விஸ்வரூபம் 2 , வடசென்னை மாஸ்டர் அரண்மனை 3 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்து பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.

இதனிடையே பல்வேறு திரைப்படங்களுக்கு பல வெஸ்டர்ன் பாடல்களை பாடிய பெருமை ஆண்ட்ரியாவுக்கே சேரும். தற்போது நடிகை ஆண்ட்ரியா அறம் படத்தின் இயக்குனரான கோபி நாயனார் இயக்கத்தில் “மனுஷி” படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல்கள் என்னவென்றால் நடிகை ஆண்ட்ரியா குறித்து பாடகி சுசித்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டிருக்கிறது.

அதாவது மேடையில் பாடும் கலாச்சாரத்தையே ஆண்ட்ரியா கெடுத்துவிட்டார். அவர் பாடும் போது கேமரா முன்வந்து இஷ்டம் போல் ஆடுவது கிளாமர் காட்டுவது போன்ற வேலை எல்லாம் செய்கிறார். அதெல்லாம் ரொம்ப மோசம்.

அவர்களைப் போன்றோர் மேடையில் பாடுவதால் தான் என்னை போன்ற கூச்சம் உடைய சிறந்த பாடகிகளுக்கு பாடுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அவரைப்போல் எல்லாரும் பாட முடியாது. அவர் பாடுவது மட்டுமில்லாமல் மேடையில் பல வேலைகளை செய்கிறார் .

இதையும் படியுங்கள்: காதலித்தும் விருப்பம் இல்லாமல் தாலி காட்டினேன் – திருமண சீக்ரெட்டை உடைத்த மாரி செல்வராஜ்!

அவர் பாடுவதை கேட்பதற்காகவா கூட்டம் செல்கிறது? அவரை பார்க்கத்தான் செல்கிறது… மேடையில் பாட வேண்டும் என்றாலே ஆடைகளும் மோசமாக இருக்க வேண்டும் என்ற கட்டமைப்பு மாறிவிட்டது. முக்கியமாக ஆண்ட்ரியா பாடும்போது எல்லோரும் என்னை பாருங்கள் என்று சொல்வது போல பாடுகிறார். அந்த பளபளப்பையும் போலி தன்மையையும் தான் மக்களும் விரும்புகிறார்கள். அந்த ரெண்டும் தான் இப்போது இருக்கிறது. எனவே சிறந்த பாடகிகள் வாய்ப்பில்லாமல் அழிந்து போகிறார்கள் என சுசித்ரா பேசியிருந்தார்.

Anitha

Recent Posts

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

32 minutes ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

42 minutes ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

1 hour ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

2 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

3 hours ago

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 49 வயது கூலித்தொழிலாளியின் கோரமுகம்!!

கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…

3 hours ago

This website uses cookies.