வா அரை மணி நேரம்.. போதையில் படுக்கைக்கு அழைத்து… மீண்டும் பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா..!

பிரபல பாடகி, ஆர்ஜே, தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகை என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் பரவியது. சமீபத்தில் தனக்கு மனநிலை சரியில்லை என கூறி பயில்வான் ரங்கநான் வெளியிட்ட வீடியோவை பார்த்து கடுப்பான சுசித்ரா, தன்னைப் பற்றி பேச சொன்னது தனுஷ் தானே என்றும் தனுஷ் எவ்வளவு பணம் கொடுத்தார் என்று கேட்டும் விளாசினார். மேலும் தன்னிடம் சில வீடியோக்கள் இருக்கிறது, அதைப்பற்றியும் பேசுங்கள் என்றும் கூறி திணற வைத்தார். அவர் பேசிய ஆடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது.

மேலும் படிக்க: “திருமண வாழ்விலிருந்து பிரிகிறோம்” – முடிவுக்கு வந்த ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி மணவாழ்க்கை..!

இந்த விவகாரத்தில் தனுஷின் பெயர் அடிப்பட்டது, அவரது ரசிகர்களுக்கு பெரும் சினிமா துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனுஷ் இதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகிறார். தனுஷின் இந்த அமைதிக்கு காரணம் அவர் குறித்த ஏதோ ஒரு ஆதாரம் சுச்சியிடம் இருப்பதுதான் என கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகைகளுடன் தனுஷ் நெருக்கமாக இருந்ததால்தான் ஐஸ்வர்யாவுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட்டு தனுஷை எச்சரித்ததாகவும் கூறப்பட்டது. இதனால், விவாகரத்து வரை சென்று இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த சுசி லீக்ஸ் விவகாரத்தினால் சுசித்ராவின் கணவர் கார்த்திக் அவரை விவாகரத்து செய்து புரிந்துவிட்டு வேறொரு பெண்ணை மறுமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில், சுச்சி லீக்ஸ் சர்ச்சை விட தற்போது பெரிய சர்ச்சை ஒன்றை கிளம்பியிருக்கிறார் சுசித்ரா. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுசித்ரா அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் கூறுகையில் என்னுடைய முன்னாள் கணவர் தன் பால் இனத்தவர். இந்த விஷயத்தை மருத்துவரை என்னிடம் சொல்லி இருக்கிறார். தனுஷ் மற்றும் என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் இருவரும் குடிபோதையில் ஒரே படுக்கையில் என்னென்ன பண்ணாங்க தெரியுமா என்று கேள்வி எழுப்பி பகீர் கிளப்பி உள்ளார். ஆண்மை இல்லாத ஒருத்தருடன் எப்படி குடும்பம் நடத்த முடியும் இதனால், அவரிடம் இருந்து நான் விவாகரத்து கேட்டு வந்தேன். இந்த புகைப்படங்களை கூட என்னுடைய ட்விட்டர் கணக்கை வைத்து என் கணவரும் தனுஷும் தான் வெளியிட்டனர் என்று சுசித்ரா தெரிவித்த இந்த சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க: OVER டார்ச்சர்.. ஜிவி பிரகாஷ் விவாகரத்துக்கு அந்த நபர் காரணம்?.. பகீர் கிளப்பும் பத்திரிகையாளர்..!

மேலும் படிக்க: Adjustment பண்ண சொல்லி மிரட்டுனாங்களா?.. பிரியா பவானி சங்கர் கொடுத்த பகீர் பதில்..!

மேலும், சுசி லீக்ஸ் விவகாரத்தில் தன்னைத் தேவையில்லாமல் இழுத்து விட்டார்கள். தனது, முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தனுஷ் உடன் சேர்ந்து இந்த பிராங்க் செய்துவிட்டனர். பிராங்க் செய்ய அக்கவுண்ட் தேவைப்படும் என்பதால் கார்த்திக் என்னுடைய அக்கவுண்ட்டை கொடுத்துவிட்டார். திரிஷா தனது பிரைவேட் புகைப்படங்களை அவரே கொடுத்தார் என்று சுசித்ரா தெரிவித்து இருந்தார். த்ரிஷா ஒன்னும் ஒன்னும் தெரியாத பாப்பா கிடையாது. என்னை மனநிலை சரியில்லாதவர் என்று எனக்கு முத்திரை குத்தி இருக்கிறார்கள். இதை நினைத்து நான் பலமுறை வேதனைப்பட்டு கதறி அழுது கோவில் கோவிலாக சென்று வேண்டியிருக்கிறேன். எல்லாத்துக்கும் கடவுள் இருக்கிறார் என்று நினைத்தேன். அதன் பிறகு, இந்தியாவில் இருக்கவே எனக்கு பிடிக்கவில்லை. யாருடனும் பேச எனக்கு இதனால்தான் பிடிக்க வில்லை லண்டனுக்கு சென்று சில ஆண்டுகள் தங்கி இருந்தேன் என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க: ‘ஜெயம்கொண்டான்’ பட நடிகையை நியாபகம் இருக்கா?.. அந்த நடிகருக்கு 2-ம் தாரமாக ஆகப் போறாராம்..!

இதில், கஷ்டமான விஷயம் என்னவென்றால் எல்லா கொடுமைகளையும் என்னுடைய பெயரை வைத்து செய்துவிட்டு கடைசியில் முகம் தெரியாத நபர் ஒருவர் ஹேக் செய்து விட்டார் என்று அவர் மீது பழி போட பார்த்தார்கள் நான் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முயன்றேன். ஆனால், அனைத்துப் பழியும் என் மீது விழுந்தது. இதில், கார்த்திக் குமார் கட்டின மனைவி என்று கூட பார்க்காமல் என்னை தன்னுடைய நண்பர்களுக்கு இறையாக்கினார். அன்று நான் உணர்ந்தேன். கார்த்திக் என்னை விட்டு பிரிந்து அவர் அம்மா வீட்டில் தான் இருந்தார். தனியாக வாழ்ந்து வரும் போது தனியாக இருக்கும் மனைவியை புது குரூப் நண்பர்களுக்கு இரையாக தூக்கிப்போட்டார்.

மேலும் படிக்க: அந்த ஹீரோயினும் GV-யும் ஓவர் நெருக்கம்.. எனக்கு இப்படி தான் இருந்துச்சு.. சைந்தவி OpenTalk..!(Video)

சோசியல் எக்ஸ்பிரிமென்ட்க்காக பல லீலைகளையும் போட்டிருக்கிறார். என்னைப் பற்றி கொக்கின் போதையில் நான் சுசித்ரா நான் தனுஷ் அனிருத்தால் கற்பழிக்கப்பட்டேன் என்றெல்லாம் எழுதுவார்கள் என்று சுச்சி வெளிப்படையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களின் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க: இறப்புக்கு முன் பவதாரிணி செய்த சேவை.. – அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்த வீடியோ..!(Video)

இந்நிலையில், சுசித்ரா பேசுகையில், பெங்களூரில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, தனக்கு பாஸாக இருந்த ஒருவர் திருமணத்திற்கு முன்னால் பேச்சுலர் பார்ட்டி கொண்டாடினார். முழு போதையில் அவர் இருந்தபோது என் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு வா அரை மணி நேரம் வா என்று தெரிவித்தார். என்ன செய்வது என்று எனக்கு அப்போது தெரியவில்லை. சரி பாத்ரூம் சென்று வருகிறேன் என்று கூறிய பின்னர் கையை விட்டுவிட்டார். உடனே அங்கிருந்து தான் வெளியேறி நள்ளிரவில் நடந்தே வீட்டுக்கு சென்றதை என்னால் இப்போதும் மறக்க முடியவில்லை என்று அந்த பேட்டியில் சுசித்ரா கூறியுள்ளார்.

Poorni

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

7 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

7 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

7 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

8 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

9 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

9 hours ago

This website uses cookies.