சந்திப் ரெட்டி பங்கா இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த அனிமல் எனும் ஹிந்தி படத்தில் ரன்பீர் கபூர் – ராஷ்மிகா நடித்திருந்தனர். அப்பா மகனின் சண்டை , குடும்ப பிரச்சனை , காதல் என அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்த அனிமல் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
டீசர், ரொமான்டிக் பாடல், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்தது. அண்மையில் வெளிவந்த இப்படம் உலகம் முழுக்க நல்ல வசூலை குவித்துள்ளது. படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் நாளுக்கு நாள் நல்ல வசூலை கொடுத்தது.
முன்னதாக அனிமல் படத்தை உலக அளவில் பெரும்பாலான ரசிகர்கள் வரவேற்று இருந்தார்கள். ஆனால், தமிழகத்தில் இப்படத்தை திரை நட்சத்திரங்கள் உட்பட பலரும் கழுவி ஊற்றி கருத்துக்களை பதிவிட்டு இருந்தனர். தமிழகத்தில், மட்டுமே படுதோல்வி அடைந்த அனிமல் திரைப்படம் உலக அளவில் ரூபாய் 800 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் அனிமல் படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதாவது, இயக்குனர் சந்திப் ரெட்டி பங்கா உங்களுடைய Craft எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் படங்களில் நீங்கள் இசையை பயன்படுத்தும் விதமும் எனக்கு பிடிக்கும். அனிமல் படத்தில் அது பயங்கரமாக இருந்தது. படத்தை தாண்டி நீங்க கொடுக்கும் இன்டர்வியூஸ் பயங்கரமாய் இருக்கிறது சார் ரொம்ப Straight Forword-ஆ இருக்கீங்க என்று கூறியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.