தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.
பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 30 நாட்களுக்குள் மீதமுள்ள நிலையில், அதற்குள் தன்னுடைய எஸ்கே 23 படத்தின் படப்பிடிப்பை துவங்கிய சிவா. தற்போது, எஸ்கே 23 படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைந்தவுடன் அமரன் படப்பிடிப்பில் இணையுள்ளார். 30 நாட்கள் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு பின்னர் மீண்டும் எஸ்கேப் 23 படப்பிடிப்பில் இணைவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் தனது ஒரு தலை காதல் குறித்து பேசி இருந்தார். இதில், கல்லூரியில் படிக்கும் பொழுது ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்ததாகவும், ஆனால் தான் காதலித்த பின் வேறொரு நபருடன் கமிட்டாகிவிட்டார். அதனால், அந்த காதல் அப்படியே போய்விட்டது. நான் சென்னையில் தொலைக்காட்சிக்கு வந்த பிறகு அந்த பெண்ணை ஒரு முறை பார்த்தேன். அவருடன் வேறொரு நபர் வந்திருந்தார். ஆனால், கூட வந்திருந்தது அந்த பெண் காதலித்த பையன் இல்லை என கலகலப்பாக அந்த பேட்டியில் பேசி இருந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.