நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஷ்யாம், ஜீவா, பரத், ஜெய் போன்றோர் ஆரம்பத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டனர். ஆனால் இடையில் அவர்கள் தங்கள் சூப்பர் ஹீரோக்களை போல நினைத்து சொதப்பலான படத்தை கொடுத்து தற்போது காணாமல் போயுள்ளனர் என சினிமா விமர்சகரும், தயாரிப்பாளருமான ஆஸ்கர் பாலாஜி பிரபு விமர்சித்துள்ளார்.
இதையும் படியுங்க : நரம்பெல்லாம் முறுக்கேறுதே… சொக்க வைக்கும் Sreeleela போட்டோஸ்..!!
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், நிறைய விஷயங்களை கூறியுள்ளார். அதில், எல்லா நடிகர்களுக்கும் கரிஷ்மா இருக்கு, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதாவுக்கு ஒரு கரிஷ்மா இருக்கு.
ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத நடிகர்கள்தான் ஷ்யாம், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் போன்றோர்.
நடிகர்கள் ஈகோ இல்லாமல் நடிக்க வேண்டும். பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வாவோடு நடிக்கிறார். இதே போல ஈகோ இல்லாமல் நடிக்க வேண்டும்.
எனக்கு தெரிந்து சினிமாவில் விஜய் சேதுபதி தான் சரியான நபர். எல்லா கதாபாத்திரங்களை சரியாக செய்கிறார்.
வில்லன், குணச்சித்திரம், ஹீரோ என எந்த கதபாத்திரமாக இருந்தாலும் நடிக்கவேண்டும். நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என கூறினால் அவர்கள் சினிமாவில் நிலைக்க முடியாது. இந்த லிஸ்டில் எஸ்கே வர முடியாது.
ஏனென்றால் சிவகார்த்திகேயன் CORRUPT ஆயிட்டாரு. அவர் தான் அடுத்த விஜய் என நடித்துக் கொண்டிருக்கிறார். எஸ்கே பேஸ்மென்ட் இல்லாம சினிமாவில் பயணம் செய்கிறார்.
ஆக்ஷன் ஹீரோவாக தற்போதுதான் அவர் களமிறங்கியுள்ளார். முன்னர் அவர் காமெடி படத்தில் தான் நடித்துள்ளார். ஆக்ஷன் என்றால் அமரன் படம் மட்டும்தான். சிவகார்த்திகேயன் எதிர்காலம் இனிமேல் தான் தெரியும். அவரை மக்கள் ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பது இனிமேல்தான் தெரியும் என கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.