இயக்குனர் சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடைய 25 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு முதலில் புறநானுறு என்று தலைப்பு வைக்கப்பட்டது.அதன் பிறகு சிவாஜிகணேசனின் பராசக்தி பட தலைப்பை படக்குழு வைத்து டீசரை வெளியிட்டார்கள்.
நடிகர் விஜய் ஆண்டனியும் அதே தலைப்பை தன்னுடைய 25 வது படத்திற்கு வைத்துள்ளதால் பெரும் சர்ச்சை நிலவியது.இந்த நிலையில் இரு தரப்பு படக்குழுவும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பராசக்தி தலைப்பு பிரச்சனை முடிவுக்கு வந்தது.
இப்படம் ஹிந்தி எதிர்ப்பை மையப்படுத்தி உருவாகி வரும் சூழலில் சிவகார்த்திகேயன் இதில் கல்லூரி மாணவனாக நடிக்கிறார்.இப்படமும் ஒரு பயோபிக் படமாக தான் உருவாகி வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.அப்போ அந்த உண்மையான கல்லூரி மாணவன் யார் என்று ரசிகர்கள் தேடிய போது,அண்ணாமலை பல்கலைக்கழத்தில் படித்த மாணவர் ராஜேந்திரனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் பராசக்தி எடுக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் கசிந்துள்ளது.
ராஜேந்திரன் கல்லூரி படித்து கொண்டிருக்கும் போது 1965ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி,இந்தி திணிப்பு எதிர்ப்பை போராடி தீக்குளித்த இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியில் கலந்து கொண்ட போது,காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் நெற்றில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இதையும் படியுங்க: லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகாவுக்கு மீண்டும் திருமணமா…இணையத்தில் கசிந்த புகைப்படம்…மாப்பிள்ளை இவரா..!
இவரை கௌரவிக்கும் விதமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அவருடைய திரு உருவப்படத்தை அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி திறந்து வைத்து மரியாதையை செலுத்தினார்.
பராசக்தி படத்திலும் ஒரு தமிழ் மாணவனாக நடிகர் சிவகார்த்திகேயன் ஹிந்தி எதிர்ப்புக்கு போராடுவது போல் டைட்டில் டீசரில் காட்டியுள்ளதால்,இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் இறந்துவிடுவார் என தெரிகிறது.ஏற்கனவே கடந்த வருடம் மேஜர் முகுந்த் பயோபிக்கில் நடித்து மாபெரும் வெற்றியை ருசித்த சிவகார்த்திகேயன்,பராசக்தி படத்திலும் ரசிகர்களின் பாராட்டை பெறுவார் என கூறப்படுகிறது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.