இயக்குனர் சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடைய 25 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு முதலில் புறநானுறு என்று தலைப்பு வைக்கப்பட்டது.அதன் பிறகு சிவாஜிகணேசனின் பராசக்தி பட தலைப்பை படக்குழு வைத்து டீசரை வெளியிட்டார்கள்.
நடிகர் விஜய் ஆண்டனியும் அதே தலைப்பை தன்னுடைய 25 வது படத்திற்கு வைத்துள்ளதால் பெரும் சர்ச்சை நிலவியது.இந்த நிலையில் இரு தரப்பு படக்குழுவும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பராசக்தி தலைப்பு பிரச்சனை முடிவுக்கு வந்தது.
இப்படம் ஹிந்தி எதிர்ப்பை மையப்படுத்தி உருவாகி வரும் சூழலில் சிவகார்த்திகேயன் இதில் கல்லூரி மாணவனாக நடிக்கிறார்.இப்படமும் ஒரு பயோபிக் படமாக தான் உருவாகி வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.அப்போ அந்த உண்மையான கல்லூரி மாணவன் யார் என்று ரசிகர்கள் தேடிய போது,அண்ணாமலை பல்கலைக்கழத்தில் படித்த மாணவர் ராஜேந்திரனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் பராசக்தி எடுக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் கசிந்துள்ளது.
ராஜேந்திரன் கல்லூரி படித்து கொண்டிருக்கும் போது 1965ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி,இந்தி திணிப்பு எதிர்ப்பை போராடி தீக்குளித்த இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியில் கலந்து கொண்ட போது,காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் நெற்றில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இதையும் படியுங்க: லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகாவுக்கு மீண்டும் திருமணமா…இணையத்தில் கசிந்த புகைப்படம்…மாப்பிள்ளை இவரா..!
இவரை கௌரவிக்கும் விதமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அவருடைய திரு உருவப்படத்தை அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி திறந்து வைத்து மரியாதையை செலுத்தினார்.
பராசக்தி படத்திலும் ஒரு தமிழ் மாணவனாக நடிகர் சிவகார்த்திகேயன் ஹிந்தி எதிர்ப்புக்கு போராடுவது போல் டைட்டில் டீசரில் காட்டியுள்ளதால்,இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் இறந்துவிடுவார் என தெரிகிறது.ஏற்கனவே கடந்த வருடம் மேஜர் முகுந்த் பயோபிக்கில் நடித்து மாபெரும் வெற்றியை ருசித்த சிவகார்த்திகேயன்,பராசக்தி படத்திலும் ரசிகர்களின் பாராட்டை பெறுவார் என கூறப்படுகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.