சினிமா / TV

பாதி சம்பளத்தை ஆட்டைய போட்டுறாங்க…அமரன் வெற்றி விழாவில் SK ஓபன் டாக்.!

அமரன் 100 வது நாள் வெற்றி விழா

கடந்த வருடம் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று,வசூலை குவித்ததோடு சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

இதையும் படியுங்க: ரசிகர்களிடம் பத்திக்கிச்சா ‘ஃபயர்’…படத்தின் விமர்சனம் எப்படி.!

மேஜர் முகுந்த் வாழ்க்கை கதையை மையமாக வைத்து இயக்குனர் ராஜுக்குமார் பெரியசாமி எடுத்திருந்தார்,இப்படத்தை கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்தது,படம் 100 நாட்களை கடந்ததை முன்னிட்டு படக்குழு நேற்று சென்னையில் வெற்றி விழா நடத்தியது.

விக்ரம் படத்திற்கு பிறகு கமலுக்கு அமரன் திரைப்படம் தான் மிகப்பெரிய லாபத்தை ஈட்டி கொடுத்தது,கிட்டத்தட்ட 350 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது,இந்த நிலையில் நேற்றைய விழாவில் பேசிய சிவகார்த்திகேயன்,கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் மட்டும் தான் தனக்கு படம் ரிலீஸ் ஆவதற்கு 6 மாதங்கள் முன்னாடியே முழு சம்பளத்தையும் கொடுத்தனர்.

பிற தயாரிப்பு நிறுவனங்கள் படம் ரிலீஸ் ஆன பிறகு பாதி சம்பளத்தை புடிங்கி விட்டுறாங்க என வெளிப்படையாக பேசியுள்ளார், சிவகார்த்திகேயன் அவருடைய கரியரில் வெளியான தோல்வி படங்களின் தயாரிப்பாளர்களை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.