அரியவகை கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ பட இயக்குனர் அதிர்ச்சி தகவல்..!

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், உருவான காமெடி திரைப்படம் ‘பிரின்ஸ்’. காமெடியை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும், மற்றொரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

புதுச்சேரியில் அமைந்துள்ள, மேல்நிலைப் பள்ளி சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் சிவகார்த்திகேயன், அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருக்கும் பிரிட்டிஷ் பெண்ணான மரியா ர்யபோஷாப்கா மீது காதல் கொண்டு… அவரை திருமணம் செய்ய முயற்சிப்பதை மிகவும் காமெடியாக இயக்கி இருந்தார் இயக்குனர்.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் தனக்கு இருக்கும், அரியவகை நோய் குறித்து முதல் முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதாவது இவருக்கு Highly Sensitive Person என்ற நோய் பாதிப்பு உள்ளதாம்.

இந்த அரியவகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், காபி குடித்தால்… இரு தினங்களுக்கு தூங்க முடியாதாம். ஆப்பிள் ஜூஸ் குடித்தால் மூளையே சுத்தமாக செயல்படாமல் போய்விடுமாம். அதிக ஒளி, அதிக நெடி, போன்றவற்றை இவர்களால் ஏற்றுக்கொள்ளவோ, அந்த சூழலில் சுவாசிக்கவோ முடியாது என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தான் நடிகை சமந்தா தனக்கு ஏற்பட்டுள்ள மையோசிட்டி பிரச்சனை குறித்து தெரிவித்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், அவரை தொடர்ந்து அனுதீப் தனக்குள்ள பிரச்சனை குறித்து பேசி ஷாக் கொடுத்துள்ளார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.