சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள “மதராஸி” திரைப்படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால் இதில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பிஜு மேனன், விக்ராந்த், ஷபீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திருப்பதி பிரசாத் என்பவர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த “மதராஸி” திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், “இந்த படத்தை திருப்பதி பிரசாத் தயாரித்துள்ளார். கதை சிறப்பாக இருந்தால் அவர் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார். அதனால்தான் தெலுங்கு சினிமாவில் ரூ.1000 கோடி வசூலை குவிக்கும் படங்கள் தொடர்ந்து வெளிவருகின்றன” என கூறினார்.
சிவகார்த்திகேயன் இவ்வாறு பேசியது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “அப்படி என்றால் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் கதை நன்றாக இருந்தாலும் செலவழிக்க தயங்குவார்கள் என சிவகார்த்திகேயன் மறைமுகமாக கூற வருகிறாரோ?” என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.