நடிகர் சூர்யா 2006 ஆம் ஆண்டு ஏழை குழந்தைகளின் கல்விக்காக அகரம் அறக்கட்டளை என்ற ஒன்றை தொடங்கினார். இப்போது வரை இந்த அறக்கட்டளையின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழை குழந்தைகள் படித்து முன்னேறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று “ரெட்ரோ” திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் “ரெட்ரோ” திரைப்படத்தின் மூலம் கிடைத்த வசூலில் ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு வழங்கினார் சூர்யா. சூர்யாவின் இச்செயல் பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலரும் சூர்யாவுக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
எனினும் சமூக வலைத்தளங்களில் சூர்யாவுக்கு எதிராக பல அவதூறுகள் பரப்பப்படுகின்றன. அந்த வகையில் அவர் அகரம் அறக்கட்டளைக்கு ரூ.10 கோடி அளித்ததற்கு பின்னணியாக ஒரு காரணத்தை கூறுகின்றனர். அதாவது “ரெட்ரோ” திரைப்படத்தின் மீது பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
ஆதலால் இதனை திசைதிருப்பவே சூர்யா ரூ.10 கோடியை அறக்கட்டளைக்கு தந்துள்ளார் எனவும் விமர்சித்து வருகின்றனர். எனினும் சூர்யா செய்த செயலில் குறை கண்டுபிடிக்காமல் அவரை முழு மனதோடு பாராட்ட வேண்டும் என சூர்யாவுக்கு ஒரு பக்கம் ஆதரவு கரங்கள் நீண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.