உலக தமிழர்களின் பேவரைட் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் அப்பா சிவகுமார் என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தாலும் அவரது தனித்துவமான நடிப்பும் ஸ்டைலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 1997ம் ஆண்டு நேருக்கு நேர் படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார்.
அதன் பின்னர் நந்தா, காக்க காக்க, பிதாமகன் , பேரழகன் , வேல் , வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, ஆறு, கஜினி , அயன் , சில்லுனு ஒரு காதல், ஆதவன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.
சூர்யா காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகை ஜோதிகாவை காதலித்து பின்னர் 8 ஆண்டுகள் பெற்றோர்கள் சம்மதத்திற்காக காத்திருந்து திருமணம் செய்துக்கொண்டதாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சூர்யா காக்கா படத்திற்கு முன்னரே ஜோதிகாவை காதலித்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது.
ஆம், 2001ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் நந்தா. இப்படத்தில் லைலா ஜோடியாக நடித்திருப்பார். ஆனால் சூர்யா பலமுறை பாலாவிடம் இப்படத்தில் ஜோதிகாவை நடிக்க வையுங்கள் என கேட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து அகதியாக வரும் பெண் காதபத்திரம் என்பதால் அது ஜோதிகாவை விட லைலாவுக்கு தான் பொருத்தமாக இருக்கும் என கூறினார். அப்பவும் கேட்காமல் திரும்ப திரும்ப ஜோதிகாவை ஹீரோயினா போடலாமே என கேட்டாராம் சூர்யா.
என்னப்பா நீ புரிஞ்சிக்கவே மாட்ற அந்த நடிகையிடம் அப்படி என்ன இருக்கு? என்ன காதலிக்கிறியா? என பட்டுன்னுகேட்டுள்ளார் பாலா. அன்றிலிருந்து அந்த பேச்சை எடுக்கவில்லையாம் சூர்யா. ஆக காக்க காக்க படத்திற்கு முன்னரே சூர்யா ஜோதிகாவை ஒருதலையாக உருகி உருகி காதலித்து வந்த ரகசியம் இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.