“மஞ்சும்மல் பாய்ஸ்” திரைப்படத்தில் சௌபின் சாஹிரின் நடிப்பை பலரும் பாராட்டி பேசியிருந்தனர். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் சௌபின் சாஹிரும் ஒருவர். இந்த நிலையில் கேரளா மாநிலம் அரூரை சேர்ந்த சிராஜ் என்பவர், “மஞ்சும்மல் பாய்ஸ்” திரைப்படத்தில் தான் ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும் படம் வெளியான பிறகு தனக்கு வாக்களித்த படி லாபத்தில் 40 சதவீத பங்கு கிடைக்கவில்லை எனவும் எர்ணாக்குளம் சார்பு நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். எனினும் இந்த வழக்கில் இருந்து சௌபின் சாஹிர் உள்ளிட்ட “மஞ்சும்மல் பாய்ஸ்” பட தயாரிப்பாளர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் இருந்து முன் ஜாமீன் பெற்றனர். மேலும் கேரள உயர்நீதிமன்றம் அவர்களுக்கு சில நிபந்தனைகளையும் விதித்தது.
இதனை தொடர்ந்து அமலாக்கத்துறையும் “மஞ்சும்மல் பாய்ஸ்” நிதி மோசடி குறித்து சௌபின் சாஹிரிடம் விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் துபாயில் நடக்கவிருக்கும் விருது விழா ஒன்றிற்கு செல்ல அனுமதி கேட்டு சௌபின் சாஹிர் கொச்சி மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். ஆனால் நிதி மோசடி வழக்கில் ஒரு முக்கியமான சாட்சி வெளிநாட்டில் இருப்பதால் அவரை சௌபின் சந்தித்தால் விசாரணை பாதிக்கக்கூடும் என அரசு தரப்பு வாதிட்டதால் சௌபின் சாஹிர் துபாய் செல்ல தடை விதித்து கொச்சி மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் தடை விதித்தது.
இதனை தொடர்ந்து துபாய் செல்ல அனுமதி கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் சௌபின் சாஹிர் மேல் முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. சௌபின் சாஹிர் துபாய் செல்ல தடை விதித்துள்ளது மலையாள திரை உலகில் பேசுபொருளாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.