சினிமா / TV

ரஜினிகாந்தின் காதலை குழி தோண்டி புதைத்த ஸ்ரீதேவியின் தாயார்- அடப்பாவமே!

கிளாசிக் ஜோடி

கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ரஜினி-கமல் ஆகிய இருவருமே ஸ்ரீதேவியுடன் போட்டி போட்டு நடித்தனர். 

இதில் ரஜினிகாந்த்-ஸ்ரீதேவி ஆகியோர் ஜோடியாக நடித்த திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. “ஜானி”, “பிரியா”, “போக்கிரி ராஜா” போன்ற பல ஹிட் திரைப்படங்களில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர்.  அதுமட்டுமல்லாது ரஜினிகாந்த் வில்லனாக நடித்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஸ்ரீதேவி நடித்த”மூன்று முடிச்சு”, “16 வயதினிலே” போன்ற திரைப்படங்களில் ரஜினிகாந்த் வில்லனாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை பெண் கேட்க சென்ற சம்பவத்தை குறித்தான தகவல் ஒன்றை குறித்துதான் இப்போது பார்க்கப்போகிறோம். 

ஐ எம் சாரி ரஜினி…

ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை ஒரு தலையாக காதலித்து வந்தாராம். ஒரு நாள் ரஜினிகாந்த் இயக்குனர் மகேந்திரனுடன் ஸ்ரீதேவியை பெண் கேட்க சென்றிருந்தாராம். ஸ்ரீதேவியின் வீட்டிற்குள் இருவரும் நுழைந்தபோதே மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டதாம். 

அப்போதே சகுணம் சரியில்லை என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஸ்ரீதேவியின் தாயாரை பார்த்து பெண் கேட்டிருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீதேவியின் தாயாரோ, “இப்போதுதான் அவள் சினிமாவில் வளர்ந்து வருகிறார். ஆதலால் எனக்கு திருமணம் செய்துகொடுக்க இஷ்டமில்லை” என கூறிவிட்டாராம். இதனால் ரஜினி தனது காதலை உள்ளுக்குள்ளேயே புதைத்துவிட்டாராம். எனினும் பின்னாளில் ரஜினிகாந்த் லதாவை திருமணம் செய்துகொண்டார். அதே போல் ஸ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.