தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து தனக்கு என மிகப்பெரிய சாம்ராஜியத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் வெளியான வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
விஜய்யை வைத்து படம் எடுக்க பல இயக்குனர்கள், தயாரிப்பாளர் ஆவலோடு காத்திருந்து வருகிறார்கள். அதேபோல் நடிகைகளும் விஜய்யுடன் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்ற கனவுடன் இருப்பார்கள். அப்படி முக்கிய ரோலில் விஜய்க்கு ஓகே சொல்லிய நடிகையை பற்றி விஜய்யின் பிஆர்ஓ-வாக பணியாற்றி தயாரிப்பாளரான பிடி. செல்வகுமார் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.
இதனிடையே, சில ஆண்டுகளுக்கு முன் துபாய் ஓட்டலில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் விஜய் நடிப்பில் புலி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அப்படத்திற்கு முன் ஸ்ரீதேவி எந்த படத்தில் நடிக்கபோவதில்லை என்று தெரிந்வித்து தன்னை தேடி வருபவர்களிடம் சொல்லி அனுப்பி வைத்து வந்தாராம். அப்படி ஒரு முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு கூட, ஸ்ரீதேவியை அவரே சென்று கூப்பிட்டு கால்ஷீட் கேட்ட போது, ரஜினி அழைத்தும் நான் நடிக்க மாட்டேன் என்ற குறிக்கோளுடன் இருந்தாராம்.
அப்படியிருக்கையில் மும்பைக்கு சென்று நடிகை ஸ்ரீதேவியிடம் புலி படத்தில் நடிக்க பிடி. செல்வகுமார் கேட்டுள்ளார். அங்கு அவரை சந்தித்து, ஸ்ரீதேவியை பற்றி புகழ்ந்தும் உங்களின் தீவிர ரசிகர் என்றும் கூறியும், ஓகே செய்துள்ளார்.
மேலும் விஜய் படத்தில் நடிக்க சில கண்டீசன்கள் போட்டு ஸ்ரீதேவியும் நடிக்க ஒப்புக்கொண்டார். ரஜினிகாந்த் படத்திற்கே ஓகே சொல்லாத ஸ்ரீதேவி, விஜய் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது தளபதி ரசிகர்களுக்கு பெருமையாக இருக்கிறது என்று கருத்துக்களை அந்த பேட்டி வீடியோவில் பிடி. செல்வகுமார் பகிர்ந்து வருகிறார்கள்.
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
This website uses cookies.