ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அவரது திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை கண்டன. ஆதலால் இவரது கெரியரும் சரிந்தது. எனினும் விடாமுயற்சியை கைவிடாமல் நம்பிக்கையுடன் தற்போதும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீகாந்த். இந்த நிலையில் தான் நடிக்க இருந்த முதல் திரைப்படத்தை குறித்த ஒரு தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த்.
இயக்குனர் கதிர், ஸ்ரீகாந்தை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தாராம். ஸ்ரீகாந்த் ஒப்பந்தமான முதல் படம் அது. ஸ்ரீகாந்த் வளர்ந்தது ஹைதராபாத் என்பதால் தமிழ் உச்சரிப்பு அவருக்கு சரியாக வரவில்லை. ஆதலால் அவருக்கு ஒரு வருடம் தமிழ் சொல்லிக்கொடுத்து தயார்படுத்தினாராம்.
அதன் பின் ஒரு வருடம் கழித்து ஷூட்டிங் போகலாம் என்று ஒரு நாள் அதிகாலை காட்சி ஒன்றை படம்பிடித்தாராம். ஏ.ஆர்.ரஹ்மான் அத்திரைப்படத்திற்காக இசையமைத்த பாடலுக்கு மான்டேஜ் எடுத்தாராம். அதன் பின் காலை 9 மணி அளவில் கதிர் ஸ்ரீகாந்தை அலுவலகத்திற்கு அழைத்து திருநெல்வேலி அல்வா ஒரு துண்டை எடுத்து ஸ்ரீகாந்திற்கு கொடுத்தாராம்.
ஸ்ரீகாந்த் அல்வாவை சாப்பிட்ட பிறகு, “இந்த படம் நாம பண்ண வேண்டாம். அடுத்த படத்துக்கு நான் உன்னை கூப்பிடுறேன். இந்த படத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு நீ செட் ஆகமாட்டாய்” என்று கூறிவிட்டாராம். இந்த சம்பவத்தை பகிர்ந்த ஸ்ரீகாந்த், “இனிமேல் திருநெல்வேலி அல்வாவே சாப்பிட கூடாது என்று முடிவு செய்தேன்” என்று தனக்கு நடந்த அவலமான சம்பவத்தையும் நகைச்சுவையாக கூறியது குறிப்பிடத்தக்கது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.