சினிமா / TV

பிரபுதேவா கான்செர்ட்டில் பாகுபாடு.. வேதனையுடன் விலகிய பிரபல நடிகை!

சென்னையில் நடைபெறவுள்ள பிரபுதேவா டான்ஸ் கான்செர்ட்டில் இருந்து நடிகை சிருஷ்டி டாங்கே விலகியுள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: இது தொடர்பாக நடிகை சிருஷ்டி டாங்கே (Srushti Dange) தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரபுதேவா இசை நிகழ்ச்சியில் என்னைப் பார்ப்பதற்காக காத்திருந்த எனது ரசிகர்கள் அனைவருக்கும், நிகழ்ச்சியிலிருந்து வெளியேற முடிவு செய்திருப்பதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.

இந்த முடிவு எந்த வகையிலும் பிரபுதேவா சாருக்கு எதிரானது அல்ல. நான் அவரது தீவிர ரசிகன், எப்போதும் அப்படியேத்தான் இருப்பேன். இருப்பினும், பாகுபாடு மற்றும் சார்புகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. பல ஆண்டுகளாக இந்தத் துறையில் இருந்த பிறகும், நீங்கள் இன்னும் தகுதியானவற்றுக்காக போராட வேண்டியிருப்பது உண்மையிலேயே வேதனை அளிக்கிறது.

பொய்யான வாக்குறுதிகளும், நிறைவேற்றப்படாத உறுதிகளும் ஏமாற்றம் அளிக்கின்றன. இவைதான் எனது முடிவுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்கள் ஆகும். பிரபுதேவா சாரைக் கொண்டாட எனக்கு ஒரு நிகழ்வு தேவையில்லை. எதுவாக இருந்தாலும் நாங்கள் எப்போதும் அவரைக் கொண்டாடுவோம்.

ஆனால், இது ஒரு நேசத்துக்குரிய நினைவாக இருந்திருக்கலாம். மாறாக, அது ஏமாற்றத்தில் முடிந்தது. இது உங்கள் அனைவருக்கும் மன்னிப்பு கேட்கும் ஒரு விஷயம் அல்ல, மாறாக நான் ஏன் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த ஒரு மனமார்ந்த குறிப்பு எனச் சொல்லலாம்.

வேண்டும் என்றால், அடுத்த முறை சிறந்த ஆரோக்கியமான மரியாதை கிடைக்கலாம். இதனால் செயல்பாடுகளும் மாறும். படைப்பாற்றல் குழுத் திட்டமிடுவதிலும், சம்பந்தப்பட்ட கலைஞர்களை மதிப்பதிலும் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால், நன்றாக இருந்திருக்கும் என்று நான் விரும்புகிறேன்.

இந்தத் திட்டம் எனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது. மேலும், இந்த நிகழ்வு இந்தக் குறிப்போடு முடிவடைய வேண்டியிருந்தது என்பது துரதிர்ஷ்டவசமானது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சமந்தாவுக்கு டும் டும் டும்.. விவாகரத்துக்கு காரணமானவரையே மறுமணம் செய்கிறார்!

பிரபுதேவா டான்ஸ் கான்செர்ட்: இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என அழைக்கப்படும் நடன இயக்குநரும், நடிகரும், இயக்குநருமான பிரபுதேவாவின் டான்ஸ் கான்செர்ட், நாளை (பிப்.22) சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனை, அருண் ஈவண்ட்ஸ் அருண் நடத்த, V.M.R.ரமேஷ், G Star. உமாபதி மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

மேலும், நடிகரும், இயக்குனருமான ஹரிகுமார் இந்த ஷோவை இயக்குகிறார். கலை இயக்குநர் கிரணின் மேற்பார்வையில், பல்வேறு விதமான செட்டுகள் அமைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் டிக்கெட்களை அறிமுகப்படுத்தும் விழா, கடந்த மாதம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிருஷ்டி டாங்கே நடனமாட இருந்தது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

2 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

3 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

4 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

5 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

5 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

6 hours ago

This website uses cookies.