சினிமா / TV

பிரபுதேவா கான்செர்ட்டில் பாகுபாடு.. வேதனையுடன் விலகிய பிரபல நடிகை!

சென்னையில் நடைபெறவுள்ள பிரபுதேவா டான்ஸ் கான்செர்ட்டில் இருந்து நடிகை சிருஷ்டி டாங்கே விலகியுள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: இது தொடர்பாக நடிகை சிருஷ்டி டாங்கே (Srushti Dange) தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரபுதேவா இசை நிகழ்ச்சியில் என்னைப் பார்ப்பதற்காக காத்திருந்த எனது ரசிகர்கள் அனைவருக்கும், நிகழ்ச்சியிலிருந்து வெளியேற முடிவு செய்திருப்பதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.

இந்த முடிவு எந்த வகையிலும் பிரபுதேவா சாருக்கு எதிரானது அல்ல. நான் அவரது தீவிர ரசிகன், எப்போதும் அப்படியேத்தான் இருப்பேன். இருப்பினும், பாகுபாடு மற்றும் சார்புகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. பல ஆண்டுகளாக இந்தத் துறையில் இருந்த பிறகும், நீங்கள் இன்னும் தகுதியானவற்றுக்காக போராட வேண்டியிருப்பது உண்மையிலேயே வேதனை அளிக்கிறது.

பொய்யான வாக்குறுதிகளும், நிறைவேற்றப்படாத உறுதிகளும் ஏமாற்றம் அளிக்கின்றன. இவைதான் எனது முடிவுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்கள் ஆகும். பிரபுதேவா சாரைக் கொண்டாட எனக்கு ஒரு நிகழ்வு தேவையில்லை. எதுவாக இருந்தாலும் நாங்கள் எப்போதும் அவரைக் கொண்டாடுவோம்.

ஆனால், இது ஒரு நேசத்துக்குரிய நினைவாக இருந்திருக்கலாம். மாறாக, அது ஏமாற்றத்தில் முடிந்தது. இது உங்கள் அனைவருக்கும் மன்னிப்பு கேட்கும் ஒரு விஷயம் அல்ல, மாறாக நான் ஏன் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த ஒரு மனமார்ந்த குறிப்பு எனச் சொல்லலாம்.

வேண்டும் என்றால், அடுத்த முறை சிறந்த ஆரோக்கியமான மரியாதை கிடைக்கலாம். இதனால் செயல்பாடுகளும் மாறும். படைப்பாற்றல் குழுத் திட்டமிடுவதிலும், சம்பந்தப்பட்ட கலைஞர்களை மதிப்பதிலும் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால், நன்றாக இருந்திருக்கும் என்று நான் விரும்புகிறேன்.

இந்தத் திட்டம் எனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது. மேலும், இந்த நிகழ்வு இந்தக் குறிப்போடு முடிவடைய வேண்டியிருந்தது என்பது துரதிர்ஷ்டவசமானது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சமந்தாவுக்கு டும் டும் டும்.. விவாகரத்துக்கு காரணமானவரையே மறுமணம் செய்கிறார்!

பிரபுதேவா டான்ஸ் கான்செர்ட்: இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என அழைக்கப்படும் நடன இயக்குநரும், நடிகரும், இயக்குநருமான பிரபுதேவாவின் டான்ஸ் கான்செர்ட், நாளை (பிப்.22) சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனை, அருண் ஈவண்ட்ஸ் அருண் நடத்த, V.M.R.ரமேஷ், G Star. உமாபதி மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

மேலும், நடிகரும், இயக்குனருமான ஹரிகுமார் இந்த ஷோவை இயக்குகிறார். கலை இயக்குநர் கிரணின் மேற்பார்வையில், பல்வேறு விதமான செட்டுகள் அமைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் டிக்கெட்களை அறிமுகப்படுத்தும் விழா, கடந்த மாதம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிருஷ்டி டாங்கே நடனமாட இருந்தது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.