இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக அறியப்படும் ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கமுக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு குறித்த தகவல்களை கசியவிடாமல் படக்குழுவினர் கட்டிக்காத்துக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்து எஸ் எஸ் ராஜமௌலி முதன்முதலாக அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“இந்தியா மற்றும் உலகமெங்கிலும் வாழும் அன்புள்ள சினிமா விரும்பிகளே, மகேஷ் பாபு ரசிகர்களே…
நாங்கள் படப்பிடிப்பை தொடங்கி சிறுது காலம் ஆகிவிட்டது. படத்தை குறித்த உங்களின் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். எனினும் படத்தை குறித்து வெறுமனே பேட்டியளிப்பது இந்த படத்துக்கு எந்த வித நியாயத்தையும் சேர்க்காது என்றளவிற்கு இந்த படத்தின் கதை மிகப்பெரியது.
சாராம்சம் மற்றும் ஆழமான உலகத்தை வெளிப்படுத்தும் ஒரு விஷயத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். நவம்பர் மாதம் 2025 ஆம் ஆண்டு அதனை வெளிப்படுத்துவோம். இதற்கு முன் பார்த்திடாத அளவு அதனை வெளிபடுத்த முயற்சி செய்து வருகிறோம். உங்கள் பொறுமைக்கு நன்றி” என ராஜமௌலி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இத்திரைப்படம் சம்பந்தப்பட்ட போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் பலரின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.