சினிமா / TV

இது வேற ஒரு உலகம்! ராஜமௌலி-மகேஷ் பாபு காம்போவில் வேற லெவல் பிரம்மாண்ட திரைப்படம்!

ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக அறியப்படும் ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கமுக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு குறித்த தகவல்களை கசியவிடாமல் படக்குழுவினர் கட்டிக்காத்துக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்து எஸ் எஸ் ராஜமௌலி முதன்முதலாக அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உங்கள் பொறுமைக்கு நன்றி

“இந்தியா மற்றும் உலகமெங்கிலும் வாழும் அன்புள்ள சினிமா விரும்பிகளே, மகேஷ் பாபு ரசிகர்களே… 

நாங்கள் படப்பிடிப்பை தொடங்கி சிறுது காலம் ஆகிவிட்டது. படத்தை குறித்த உங்களின் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். எனினும் படத்தை குறித்து வெறுமனே பேட்டியளிப்பது இந்த படத்துக்கு எந்த வித நியாயத்தையும் சேர்க்காது என்றளவிற்கு இந்த படத்தின் கதை மிகப்பெரியது. 

சாராம்சம்  மற்றும் ஆழமான உலகத்தை வெளிப்படுத்தும் ஒரு விஷயத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். நவம்பர் மாதம் 2025 ஆம் ஆண்டு அதனை வெளிப்படுத்துவோம். இதற்கு முன் பார்த்திடாத அளவு அதனை வெளிபடுத்த முயற்சி செய்து வருகிறோம். உங்கள் பொறுமைக்கு நன்றி” என ராஜமௌலி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இத்திரைப்படம் சம்பந்தப்பட்ட போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் பலரின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.