கடந்த மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சூர்யாவின் “ரெட்ரோ” திரைப்படமும் சசிகுமாரின் “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகின. இதில் “ரெட்ரோ” திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு அத்திரைப்படம் சரியாக போகவில்லை.
படக்குழுவினர் உலகளவில் ரூ.200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தாலும் ரசிகர்கள் பலரும் “200 கோடிகளுக்கு மேல் வசூல் ஆக வாய்ப்பே இல்லை” என விமர்சித்து வந்தனர். எனினும் மறுபக்கம் “டூரீஸ்ட் ஃபேமிலி” திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. பல நாட்களாக ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக திரையரங்கம் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள டிவீட் ஒன்று சூர்யா ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.
“டூரிஸ்ட் ஃபேமிலி என்ற மிகவும் அற்புதமான திரைப்படத்தை பார்த்தேன். மனதை கவர்ந்த திரைப்படமாகவும் நகைச்சுவை மூட்டும் திரைப்படமாகவும் அமைந்திருந்தது. படம் தொடக்கம் முதல் இறுதி வரை ஆர்வமூட்டும் விதமாகவும் இருந்தது. அபிஷன் ஜீவிந்த் மிகச்சிறப்பாக இயக்கியிருந்தார். அவரது எழுத்தும் சிறப்பாக இருந்தது. சமீப ஆண்டுகளில் மிகச் சிறந்த திரை அனுபவத்தை தந்ததற்கு நன்றி. படத்தை யாரும் தவறவிட்டுவிடாதீர்கள்” என்று ராஜமௌலி தனது எக்ஸ் தளத்தில் “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படத்தை புகழ்ந்து தள்ளியிருந்தார்.
சூர்யாவின் “ரெட்ரோ” திரைப்படத்தை “டூரிஸ்ட் ஃபேமிலி” ஓவர்டேக் செய்த நிலையில் ராஜமௌலியின் பதிவை பார்த்த பல சூர்யா ரசிகர்கள், கொஞ்சம் கடுப்பில் இருப்பதாக சமூக வலைத்தளங்களின் மூலம் தெரிய வருகிறது.
வீடுகளுக்கு மட்டும் நிறுத்தினால் போதாது, மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும் என பாமக செயல் தலைவர்…
மாவீரன் இயக்குனர் சிவகார்த்திகேயனை வைத்து “மாவீரன்” என்ற வித்தியாசமான படைப்பை கொடுத்த மடோன் அஷ்வின், அடுத்ததாக சீயான் விக்ரமை வைத்து…
நிதி ஆயோக் என்ற அமைப்பு கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. தேசிய வளர்ச்சியில் மாநிலங்களின் தீவிர ஈடுபாடு, கூட்டாட்சி, அரசியல்…
சூர்யா 46 சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் இறுகட்டப் படப்பிடிப்பு…
பெரிய பாய்னு கூப்புடாதீங்க ஏ.ஆர்.ரஹ்மானை அவரது ரசிகர்கள் பலரும் பெரிய பாய் என்று செல்லமாக குறிப்பிடுவது வழக்கம். அந்த வகையில்…
செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே கனரக லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுனர் டீ சாப்பிடுவதற்காக அருகில் இருந்த கடைக்கு சென்றுள்ளார் அப்போது…
This website uses cookies.