இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் “பாகுபலி” திரைப்படத்தின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்தவர். அதனை தொடர்ந்து இவர் இயக்கிய “RRR” திரைப்படம் உலகளவில் ரூ.1200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
“RRR” திரைப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரிசாவில் நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக வாரணாசி நகரத்தையே செட் போட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவித்தன. எனினும் இத்திரைப்படத்தை குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.
இவ்வாறு இத்திரைப்படம் இன்னும் அறிவிக்கபடாத நிலையில் டிஜிட்டல் உரிமத்தில் மிகப் பெரிய வியாபாரத்தை பார்த்துள்ளதாம். அதாவது நெட்பிலிக்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை இதுவரை இல்லாத அளவில் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாம். ஆனால் அதன் தொகை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் பிரித்விராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
2026-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவும் அதிமுகவும் எதிரெதிர் துருவங்களாக களமிறங்குகின்றன. தற்போது திமுக கூட்டணியில் எவ்வித…
This website uses cookies.