இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் “பாகுபலி” திரைப்படத்தின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்தவர். அதனை தொடர்ந்து இவர் இயக்கிய “RRR” திரைப்படம் உலகளவில் ரூ.1200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
“RRR” திரைப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரிசாவில் நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக வாரணாசி நகரத்தையே செட் போட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவித்தன. எனினும் இத்திரைப்படத்தை குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.
இவ்வாறு இத்திரைப்படம் இன்னும் அறிவிக்கபடாத நிலையில் டிஜிட்டல் உரிமத்தில் மிகப் பெரிய வியாபாரத்தை பார்த்துள்ளதாம். அதாவது நெட்பிலிக்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை இதுவரை இல்லாத அளவில் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாம். ஆனால் அதன் தொகை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் பிரித்விராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.