“தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிலம்பரசன் தனது 49 ஆவது திரைப்படத்தில் ஒப்பந்தமானார். இத்திரைப்படத்தை Dawn Pictures சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பதாகவும் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் பூஜையும் போடப்பட்டது. ஆனால் டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை ஆகாஷ் பாஸ்கரனை வலைவீசி தேடி வரும் நிலையில் தற்போது “STR 49” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான் சிம்பு ஒரு அதிரடி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளிவருகிறது. அதாவது Dawn Pictures நிறுவனத்தாரை தொடர்புகொண்ட சிம்பு, “நீங்கள் தயாரிக்கும் பிற திரைப்படங்களான இட்லி கடை, பராசக்தி போன்ற திரைப்படங்களை முதலில் வெளியிடுங்கள். அத்திரைப்படங்கள் வெளியான பிறகு உங்கள் நிறுவனத்தில் நான் நடிக்கிறேன்” என்று கூறிவிட்டாராம்.
அந்த வகையில் சிம்புவின் 49 ஆவது திரைப்படமாக மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படம் இருக்கக்கூடும் என தெரிய வருகிறது. இத்திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்கவுள்ளதாகவும் இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ரொமான்டிக் டிராமாவாக உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் “STR 49” திரைப்படமாக மணிரத்னம் இயக்கவுள்ள திரைப்படமாகத்தான் இருக்கும் என யூகிக்கப்படுகிறது.
ஆந்திர மாநிலம் முழுவதும் தற்போது கங்கை அம்மன் திருவிழா, காவம்மா திருவிழா ஆகியவை போன்ற அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெற்று…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த மே மாதம் 24 ஆம் தேதி…
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது, முதல்வர்…
கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் மாநகராட்சி குமரன் உயர்நிலைப் பள்ளியில் பாடநூல், சீருடைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட…
இசைஞானி அவதரித்த தினம் இசைஞானி என்று இசை ரசிகர்களால் போற்றப்படும் இளையராஜா இன்று தனது 82 ஆவது வயதில் அடி…
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இது…
This website uses cookies.