சினிமாவிற்கு தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தவர் என்று சொன்னால் அது கமலஹாசன் தான். இவர் தன்னுடைய குழந்தை பருவத்திலிருந்து சினிமாவிற்கு என்று தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்துள்ளார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் பல தொழில்நுட்ப கருவிகளை கொண்டு சேர்த்தவர் என்று கூட சொல்லலாம்.
அந்த வகையில் இவரை போன்று குழந்தை பருவத்திலிருந்து தனது வாழ்நாள் முழுவதும் சினிமாக்கு என்று அர்ப்பணித்தவர் நடிகர் சிம்பு. இவர் குழந்தை நடிகராக அறிமுகமாகி ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகின்றது.
இவர் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்து கொண்டு இருந்தார். அதன் பிறகு ஒரு சமயத்தில் பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் பல சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டு இருந்தார். அந்த வகையில் மீண்டும் மாநாடு என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவுக்கு ரி-என்ட்ரி கொடுத்துள்ளார்.
அதன் பிறகு இவருக்கு டாக்டர் பட்டம் பல பட வாய்ப்புகள் விளம்பரங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் என்று அடுத்தடுத்து வர தொடங்கியிருந்தது. இப்படி நிலையில் இயக்குனர் கௌதம் வாசுதேவமேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு இந்தத் திரைப்படம் வெளிவந்து பெரிய அளவு சிம்புவுக்கு வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் வரவேற்பு பெற்றது.
இப்படி ஒரு நிலையில் நடிகர் சிம்பு சமீபத்தில் தனது சம்பளத்தை அதிகப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இவர் நீண்ட காலமாக வெற்றிப்படம் இல்லாத காரணத்தினால் சமீபத்தில் மாநாடு மற்றும் வெந்து தனித்தது காடு இந்த திரைப்படங்கள் வெற்றியை கொடுத்தது.
மேலும், எனக்கு பின்னால் வந்த ஜூனியர்கள் கூட அவருடைய சம்பளத்தை அதிகப்படுத்தி விட்டார்கள் நாம் ஏன் இன்னும் சம்பளத்தை அதிகப்படுத்தவில்லை என்று நினைத்து தற்பொழுது 3.30 கோடி தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.
இனி தான் என்னுடைய ஆட்டமே ஆரம்பம் என்று சொல்லும் வகையில் இந்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.