சினிமாவில் காதல் , திருமணம் கிசிகிசு என்பது சாதாரண விஷயம்தான். ஆனால் அப்படி உண்மையாக காதலித்து திருமணம் வரை சென்று நிலைத்து வாழ்க்கையை வென்று காட்டிய சினிமா பிரபலங்கள் வெகு சிலரே.
அப்படித்தான் பிரபல நடிகரை வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து தற்போது வரை சோகமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் வாரிசு நடிகையான நிரோஷா.
நடிகவேல் எம்ஆர் ராதாவின் இளைய மகளும் ராதிகாவின் தங்கையுமான நடிகை நிரோஷா 1988ல் வெளியான அக்னி நட்சத்திரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமனார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார்.
செந்தூரப்பூவே படத்தில் முதன்முறையாக ராம்கிக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருப்பினும் அதை வெளியே சொல்லாமல் தொடர்ந்து ராம்கியுடன் பல படங்களில் ஒன்றாக நடித்தனர்.இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
ஒரு கட்டத்தில் காதல் விஷயம் வீட்டிற்கு தெரிந்து நிரோஷாவை எச்சரித்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் மீறி 1995ல் ராம்கியை கரம் பிடித்தார். தொடர்ந்து சொத்து பிரச்சனை, வீடு ஜப்தி என பல பிரச்சனைகளை இருவரும் சமாளித்தனர்.
திருமணத்திற்கு பின் 2000ஆம் ஆண்டு முதல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பை மீண்டும் தொடர்ந்தார். என்னதான் இருவரும் மனம் ஒத்து திருமணம் செய்தாலும், இவர்களுக்கு இருக்கும் ஒரே கவலை குழந்தை இல்லாததுதான்.
இருப்பினும் இந்த ஜோடி இன்றும் மிகவும் அன்யோன்யமாய் உள்ளனர். 28 வருடங்களாகியும் குழந்தைப்பேறு இல்லாமல் வாழ்க்கை வாழ்நது வருகின்றனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.