தனுஷ் கூட மீனாவுக்கு கல்யாணமா?.. இந்த பிரபலமே இப்படி சொல்லலாமா?.. அந்தணன் ஆதங்கம்..!

பிரபல பாடகி, ஆர்ஜே, தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகை என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் பரவியது.

மேலும் படிக்க: “திருமண வாழ்விலிருந்து பிரிகிறோம்” – முடிவுக்கு வந்த ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி மணவாழ்க்கை..!

சமீபத்தில் தனக்கு மனநிலை சரியில்லை என கூறி பயில்வான் ரங்கநான் வெளியிட்ட வீடியோவை பார்த்து கடுப்பான சுசித்ரா, தன்னைப் பற்றி பேச சொன்னது தனுஷ் தானே என்றும் தனுஷ் எவ்வளவு பணம் கொடுத்தார் என்று கேட்டும் விளாசினார். மேலும் தன்னிடம் சில வீடியோக்கள் இருக்கிறது, அதைப்பற்றியும் பேசுங்கள் என்றும் கூறி திணற வைத்தார். அவர் பேசிய ஆடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது.

இந்த விவகாரத்தில் தனுஷின் பெயர் அடிப்பட்டது, அவரது ரசிகர்களுக்கு பெரும் சினிமா துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனுஷ் இதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகிறார். தனுஷின் இந்த அமைதிக்கு காரணம் அவர் குறித்த ஏதோ ஒரு ஆதாரம் சுச்சியிடம் இருப்பதுதான் என கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகைகளுடன் தனுஷ் நெருக்கமாக இருந்ததால்தான் ஐஸ்வர்யாவுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட்டு தனுஷை எச்சரித்ததாகவும் கூறப்பட்டது. இதனால், விவாகரத்து வரை சென்று இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த சுசி லீக்ஸ் விவகாரத்தினால் சுசித்ராவின் கணவர் கார்த்திக் அவரை விவாகரத்து செய்து புரிந்துவிட்டு வேறொரு பெண்ணை மறுமணம் செய்துக்கொண்டார்.

மேலும் படிக்க: OVER டார்ச்சர்.. ஜிவி பிரகாஷ் விவாகரத்துக்கு அந்த நபர் காரணம்?.. பகீர் கிளப்பும் பத்திரிகையாளர்..!

இந்நிலையில், சுச்சி லீக்ஸ் சர்ச்சை விட தற்போது பெரிய சர்ச்சை ஒன்றை கிளம்பியிருக்கிறார் சுசித்ரா. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுசித்ரா அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் கூறுகையில் என்னுடைய முன்னாள் கணவர் தன் பால் இனத்தவர். இந்த விஷயத்தை மருத்துவரை என்னிடம் சொல்லி இருக்கிறார். தனுஷ் மற்றும் என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் இருவரும் குடிபோதையில் ஒரே படுக்கையில் என்னென்ன பண்ணாங்க தெரியுமா என்று கேள்வி எழுப்பி பகீர் கிளப்பி உள்ளார்.

ஆண்மை இல்லாத ஒருத்தருடன் எப்படி குடும்பம் நடத்த முடியும் இதனால், அவரிடம் இருந்து நான் விவாகரத்து கேட்டு வந்தேன். இந்த புகைப்படங்களை கூட என்னுடைய ட்விட்டர் கணக்கை வைத்து என் கணவரும் தனுஷும் தான் வெளியிட்டனர் என்று சுசித்ரா தெரிவித்த இந்த சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க: ‘ஜெயம்கொண்டான்’ பட நடிகையை நியாபகம் இருக்கா?.. அந்த நடிகருக்கு 2-ம் தாரமாக ஆகப் போறாராம்..!

மேலும், சுசி லீக்ஸ் விவகாரத்தில் தன்னைத் தேவையில்லாமல் இழுத்து விட்டார்கள். தனது, முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தனுஷ் உடன் சேர்ந்து இந்த பிராங்க் செய்துவிட்டனர். பிராங்க் செய்ய அக்கவுண்ட் தேவைப்படும் என்பதால் கார்த்திக் என்னுடைய அக்கவுண்ட்டை கொடுத்துவிட்டார். திரிஷா தனது பிரைவேட் புகைப்படங்களை அவரே கொடுத்தார் என்று சுசித்ரா தெரிவித்து இருந்தார். த்ரிஷா ஒன்னும் ஒன்னும் தெரியாத பாப்பா கிடையாது. என்னை மனநிலை சரியில்லாதவர் என்று எனக்கு முத்திரை குத்தி இருக்கிறார்கள். இதை நினைத்து நான் பலமுறை வேதனைப்பட்டு கதறி அழுது கோவில் கோவிலாக சென்று வேண்டியிருக்கிறேன். எல்லாத்துக்கும் கடவுள் இருக்கிறார் என்று நினைத்தேன். அதன் பிறகு, இந்தியாவில் இருக்கவே எனக்கு பிடிக்கவில்லை. யாருடனும் பேச எனக்கு இதனால்தான் பிடிக்க வில்லை லண்டனுக்கு சென்று சில ஆண்டுகள் தங்கி இருந்தேன் என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க: Adjustment பண்ண சொல்லி மிரட்டுனாங்களா?.. பிரியா பவானி சங்கர் கொடுத்த பகீர் பதில்..!

இப்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இளம் நடிகரை திருமணம் செய்கிறார் என்றும் தனுஷ் மீனாவை திருமணம் செய்கிறார் என்ற செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது என்று சுசித்ரா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பேசிய அந்தணன் தனுஷ், மீனா தொடர்பாக சுசித்ரா பேசியிருப்பது அவர் என்ன மனநிலையில் சொன்னார் என்று தெரியவில்லை. அதை எல்லாம் கேட்கும் போது பேரதிர்ச்சியாக இருக்கிறது. சுசித்ரா போற போக்கில் இப்படி பேசி இருந்தாலும், இது போக போக விஸ்வரூபம் எடுக்கும் என்றும், யாரோ ஒரு பெண்ணாக இருந்தால் இந்த விஷயம் இந்த அளவிற்கு பேசுபொருளாக இருக்காது. சுசித்ரா சினிமாவில் 20 ஆண்டுக்கு மேலாக இருந்தவர் அனைத்து நடிகர்களிடமும் பழகியவர் என்பதால் இந்த விஷயத்தை சாதாரணமாக கடந்து விட முடியாது, இருந்தாலும் இந்த பேட்டியில் தனது மொத்த ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்து இருக்கிறார். இந்த விஷயத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர் சுசித்ரா தற்போது தான் மனதளவில் தயாராக இருக்கிறார் என்று வலைப்பேச்சு அந்தணரன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Poorni

Recent Posts

கடனை திருப்பி தராததால் மரத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய விவகாரம்.. போலீசார் செக்..!!

சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…

1 hour ago

படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…

2 hours ago

நெல்சன் சார், நீங்க என்ன இங்க? இணையத்தில் லீக் ஆன வெற்றிமாறன்- சிம்பு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்!

வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…

2 hours ago

சமந்தாவிடம் வம்பிழுத்த நபர்கள்.. கோபத்தோடு பேசிய சமந்தாவின் ஷாக் வீடியோ!

நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…

2 hours ago

என் மீது வழக்கு போட்ட சிபிஐ அமைப்பை தண்ணி குடிக்க வைத்தவன் நான்… ஆ.ராசா பெருமிதம்!

புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…

3 hours ago

அந்த நபர் அப்படி பண்ணது… அதிர்ச்சியாகிட்டேன்- ஜொனிடா காந்திக்கு நடந்த பாலியல் சீண்டல்? அடக்கொடுமையே

மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…

4 hours ago

This website uses cookies.